Friday, August 12, 2011

நாம் கேட்கக் கூடிய துஆக்கள் ஏற்கப்படாதது ஏன்

இறைநேசச் செல்வர்களில் ஒருவரான ஹஸ்ரத் இப்றாஹீம் இப்னு அத்ஹம் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது; அல்லாஹுத் தஆலா நாயன் திருக்குர்ஆனிலே இவ்வாறு கூறுகிறான்.
“என்னை அழையுங்கள், நான் உங்களுக்கு விடையளிக்கிறேன் எனக் கூறுகிறான், நாங்கள் அவனை அழைக்கிறோம். ஆனால், அவன் எங்களின் அழைப்புகளுக்கு (துஆக்களுக்கு) விடையளிக்கவில்லையே!” அதற்கு இப்றாஹீம் இப்னு அத்ஹம் (ரலி) அவர்கள் இவ்வாறு விடையளித்தார்கள். உங்கள் உள்ளங்கள் பத்து விடயங்களினால் இறந்துவிட்டன என்று கூறிவிட்டு பின்வருமாறு எடுத்தியம்பினார்கள்.
1. நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி அறிந்து வைத்திருக்கிaர்கள், ஆனால், அவனுக்குரிய கடமைகளை உதாசீனம் செய்து நிறைவேற்றுவதில்லை.
2. அல்லாஹ்வின் கலாமாகிய குர்ஆன் ஷரீபை ஓதுகிaர்கள். அதில் கூறியுள்ளவாறு நடக்கிaர்கள், ஆனால் செயற்படுத்துவதில்லை.
3. ஷைத்தான் உங்களுடைய கடும்பகைவன் என்று வாதிக்கின்aர்கள். ஆனால், அவனைத்தான் பின்பற்றுகிaர்கள்.
4. கண்மனி நாயகம் (ஸல்) அவர்கள் மீது அன்பு இருக்கின்றது என்று மார்பு தட்டியவர்களாக வாதிக்கிaர்கள். ஆனால், அவர்களின் ஸ¤ன்னத்தான வழிமுறைகளை பின்பற்றி நடப்பதில்லை.
5. சுவர்க்கத்தை நேசிப்பதாக வாதிக்கிaர்கள். ஆனால், அதற்காக எந்த ஆயத்தமும் செய்வதில்லை.
6. நரகத்தை அஞ்சுவதாக வாதிக்கிaர்கள், ஆனால் பாவத்தை விட்டும் விலகிவிட மறுக்கிaர்கள்.
7. மரணம் எப்பொழுதாவது வந்து சேரும் என நம்பிக்கை வைத்துள்Zர்கள். ஆனால் அதற்குரிய முன்னாயத்தங்களை செய்யாமல் உலக ஆசையில் திளைத்திருக்கிaர்கள்.
8. பிறர்களின் குறைகளை துருவித்துருவி ஆராய்கிaர்கள். உங்களின் குறைகளை விட்டு விடுகிaர்கள்.
9. அல்லாஹுத் தஆலா நாயன் தந்த உணவை சாப்பிடுகிaர்கள். அவனுக்கு நன்றி கெட்டவர்களாக வாழ்கிaர்கள். உங்களில். மெளத்தானவர்களை அடக்கம் செய்கிaர்கள். ஆனால், அவர்களின் மூலமாக படிப்பினை பெறுகிaர்கள் இல்லை; என இப்றாஹீம் இப்னு அத்ஹம் (ரலி) அவர்கள் திருவாய் மலர்ந்தருளினார்கள்.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes