Tuesday, August 2, 2011

சஹாபாக்களின் மார்க்க கூற்றும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பிர்கினிய சகோதரர்களே, சஹாபாக்களின் மார்க்க கூற்று வஹியாகுமா? அவர்களை மார்க்க விஷயத்தில் பின்பற்றுவது தவ்ஹீதை விட்டு வெளியேற்றுமா?
என்பன போன்ற சர்ச்சைகள் தமிழகத்தில் பரவளாக காண்ப்படுவதை நம்மால் காண முடிகிறது, எனவே இதுபற்றிய தெளிவை மிகவும் சுறுக்கமான முறையில் உங்களிடம் கேள்வி-பதில் வடிவில் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
கேள்வி 1: அல்லாஹிவின் தூதருக்கு மட்டும் தான் வஹீ வரும், சாஹாபாக்களுக்கு வஹீ வராது, எனவே குர்ஆன் மற்றும் சுன்னாவை தான் பின்பற்ற வேண்டும் சாஹாபாக்களை பின்பற்ற தேவை இல்லை!
பதில்: ஆம், குர்ஆன் சுன்னாவை மட்டும் தான் பின்பற்றவேண்டும், ஆனால் சுன்னா என்பதன் வரைவிளக்கம் என்ன? நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் சொல், செயல் , அங்கிகாரம் ஆகியவைதான் சுன்னா என்பதை நாம் அறிவோம். ஆனால் நபிகள் நாயகம் சொன்னதாக, செய்ததாக, அங்கிகரித்தாக நேரடியாகவும் வரலாம், மறைமுகமாகவும் வரலாம். இது பற்றி சற்று விரிவாக பார்போம்.
ஹதீஸின் சங்கிலி தொடர் நூல் ஆசிரியரிடமிருந்து யார் வரை சென்று முடிகிறது என்பதை வைத்து ஹதீஸ்களை மூன்றாக ஹதீஸ் கலை வல்லுனர்கள் பிரிப்பார்கள், கூறப்படும் ஹதீஸ் நபி(ஸல்) அவர்கள் வரை சென்று முடிந்தால் அவை மர்ஃபுவான ஹதீல் எனப்படும், சஹாபிவரை சென்று முடிந்தால் அவை மவ்கூஃபான ஹதீஸ் எனப்படும், தாபியி அல்லது அவர்களுக்கு கீழ் உள்ளவர் வரை சென்று முடிந்தால் அவை மக்தூவான ஹதீஸ் எனப்படும்.
இப்பொழுது நாம் சுன்னா என்று சொல்வது மர்ஃபுவான ஹதீஸை தான்(நபி(ஸ்ல) அவர்களுடன் தொடர்பு படுத்தி அறிவிப்பது). இதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.
மர்ஃபுவான ஹதீஸ்களை இரண்டு வழிகளில் அறிவிக்கலாம், ஒன்று நேரடியாக அறிவிப்பது இதை மர்ஃபு சரிஹ் (مرفوع صريحاً) என்றும், மற்றோண்டு மறைமுகமாக, அதாவது மேலோட்டமாக பார்த்தால் சஹாபியின் கூற்று ஆனால் அதை நபி(ஸல்) அவர்கள் மூலம் தான் அறிந்து கொள்ள முடியும் என்பதால் அவையும் மர்ஃபு என்ற தரத்திற்கு உயரும் இவற்றை மர்ஃபு ஹுக்மன்(مرفوع حكماً) என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் அழைப்பார்கள்.
நேரடியாக அறிவித்தல்(مرفوع صريحاً)
நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக, செய்ததாக அல்லது அங்கிகரித்தாக நேரடியாக அறிவிப்பது.
உதாரணம்:

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes