Saturday, August 20, 2011

லைலத்துல் கத்ர் இரவை எதிர்பார்த்து ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம் அவர்கள்,

உலகைப் படைத்து பரிபாலித்து கொண்டிருக்கும் வல்ல இறைவன் மனித சமுதாயம் ஸாலிஹான நல்லமல்கள் புரிந்து தக்வா உள்ளவர்களாக மாறுவதற்கு ரமழான் எனும் ஒரு மாதத்தை தந்திருக்கின்றான்.

ரமழானில் மூன்று பகுதிகளில் அதாவது ரஹ்மத் மற்றும் மஃபிரத் எனும் பிரிவுகளை நிறைவு செய்துவிட்டு இதுகும்மினன் நார் எனும் நரக விடுதலையை பெற்றுத்தரக்கூடிய கடைசிப் பத்தில் இருந்து கொண்டு இருக்கின்றோம்.

இவ் இரவின் சிறப்பைப் பற்றி வல்ல இறைவன் பின்வருமாறு கூறுகின்றான். “லைலத்துல் கத்ர் இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது” என்று கூறுகின்றான்.

இப்புனித இரவை பற்றி கண்மணி நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் பின்வருமாறு கூறினார்கள்,

“உங்களிடம் ரமழான் மாதம் வந்துள்ளது. அதில் 1000 மாதங்களை விட சிறந்ததோர் இரவு உண்டு. எவர் அவ்விரவில் வழங்கப்படும் நன்மையை இழக்கிறாரோ அவர் எல்லா நன்மைகளையும் இழந்து விடுகின்றார்” என்று குறிப்பிட்டார்கள். எனவே மேற்கூறப்பட்ட இரண்டு பொன் மொழிகளும் இவ்விரவின் சிறப்பை எடுத்துக் காட்டுக்கின்றன.

இவ் இரவிலே ஹஸ்ரத் ஜிப்ரீல் (அலை) தலைமையில் அல்லாஹ்வின் அருளும் ரஹ்மத்தும் பொருந்திய மாலாயிக்காமார்கள் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். அதேபோல் கடைசி பத்திலே எந்த இரவில் லைலத்துல் கத்ர் இருக்கிறது என்பதை ரமழானின் கடைசிப் பத்து ஒற்றைப்படை நாட்களில் தேடிக் கொள்ளுமாறு ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம் கூறியிருக்கிறார்கள்.

அதாவது ஒரு சமயம் லைலத்துல் கத்ர் இரவை எதிர்பார்த்து ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம் அவர்கள் பள்ளிவாசலில் ரமழான் மாத முற்பகுதியில் தரித்திருந்தார்கள்.

அவ்விரவுகளில் அந்நாளை அடையவில்லை. பின் இரண்டாம் பகுதியில் பள்ளியின் உட்பக்கம் குப்பத்துன் துர்க்கியா என்ற கூடாரத்தில் இஃதிகாப் இருக்கையில் தங்கள் தலையை குப்பாவின் வெளியே வைத்து பின்வருமாறு சொன்னார்கள். ரமழான் மாதம் முதல் 10 நாட்கள் பள்ளியில் தரித்திருந்து லைத்துல் கத்ர் இரவை எதிர்பார்த்தேன்.

ஆனால் பெறவில்லை. பின் நடுப் பகுதியில் எதிர்பார்த்தேன் ஆனால் பெறவில்லை. ஆனால் லைலத்துல் கத்ர் இரவு கடைசிப்பத்து ஒற்றைப்படை நாட்களில் உண்டு எனச் சொல்லப்பட்டது.

அவ் இரவை எவர் அடைந்து கொள்ள விரும்புகிறாரோ அவர் ரமழான் மாதம் கடைசிப் பத்தில் பள்ளியில் தரித்திருந்து நல்லமல்களில் ஈடுபட்டு அவ் இரவை அடைந்து கொள்ளட்டும் என நாயகம் ஸல்லல் லாஹ அலைஹிவஸல்லம் கூறினார்கள்.

அதேபோல் இப்புனித லைலத்துல் கத்ர் இரவின் அடையாளங்கள் எவ்வாறு உள்ளது என்பது சம்பந்தமாக பார்க்கையில் நாயகம் ஸல்லல்லாஹ (அலை) அவர்கள் கூறினார்கள். லைலத்துல் கத்ர் இரவை சந்திப்பதற்கான பகல் நேர சில அடையாளங்கள்.

அன்றைய பகல் சூரியன் இரவின் சந்திரனை போன்று மிகவும் தெளிவாக இருக்கும். அன்று சூரியனில் சூடோ குளிரோ இருக்காது. சமமாயிருக்கும், அன்று காலை சூரியன் உதிக்கும் போது அதின் கதிர்கள் இருக்காது, ஆக அந்நாளில் இவ் அடையாளங்களை பகல் நேரத்தில் அவதானிக்கலாம்.

“ஸெய்யதினா ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் அநேக மலக்குகள் அவ் இரவில் பூமிக்கு வருகின்றனர். இதனை இமாம் ராஸி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

லைலத்துல் கத்ர் காலையானதும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மலக்குமார்கள் கூட்டத்தை நோக்கி மலக்குகளே பயணமாக ஆயத்தமாகுங்கள். என்று அழைப்பர். அப்போது மலக்குகள் நாயகம் ஸல்லல்லாஹ அலைஹிவஸல்லம் அவர்களின் உம்மத்தினரை என்ன செய்யப் போகின்aர்? என்று கேட்பார்கள்.

அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் இம்மகத்தான இரவில் அவனது அருளான பார்வை அவர் மீது செலுத்தி அவர்களுடைய பிளைகளை பொறுக்கிறான்.

அவர்களை மன்னித்து விடுகிறான். என்று கூறுவார்கள். ஆயினும் (04) பேருடைய பிழைகளை பொறுக்கவேமாட்டான். அவர்கள் யார் என்று கேட்க அவர்கள் 1. தொடர்ந்து மதுபானம் அருந்தியவன் 2. பெற்றோரை நோவிப்பவன். 3. தனது குடும்பத்தினரை விலக்கி நடப்பவன். 4. மூன்று நாட்களுக்கு மேல் தனது முஸ்லிம் சகோதரர்களுடன் பேசாமலிருப்பவர் என்று கூறினார்கள்.

னவே மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனம் மற்றும் நபி மொழிகள் என்பவற்றை உற்றுநோக்கும் போது லைலத்துல் கத்ர் இரவின் மகிமையை எடுத்துக் காட்டுகின்றன.

எனவே அவ் ஒற்றைப்படை நாட்களை அமல்களை கொண்டு சிறப்பித்து ரமழானுடைய கடைசிப் பத்தில் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம் எதை அதிகம் (துஆக்களை) ஓதுமாறு சொன்னார்களோ அவற்றை அதிகம் அதிகம் ஓதி இப்பாக்கியம் கிடைப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

எனவே லைலத்துல் கத்ர் இரவின் பூரண நன்மை கிடைப்பதற்கும் நரகத்திலிருந்து விடுதலை பெறுவதற்கும் ரையான் எனும் சுவர்க்கம் செல்வதற்கும் ஒவ்வொரு ஆண், பெண் இருபாலாருக்கும் கிடைப்பதற்கு வல்ல ரஹ்மான் அருள்பாலிப்பானாக! ஆமீன்.


0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes