Wednesday, September 11, 2013

மந்தாரையின் மருத்துவ பயன்பாடு

சென்னை போன்ற பெரு நகரங்களில் மந்தாரை இலைகளைச் சேர்த்து ஈக்குகளால் தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு  சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச்  சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன. 
In big cities like Chennai ORCHID ikkukal leaves along the stitch used to eat rice.

இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை  காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது.  மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும்  இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். 

மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரணத்தால்  வரும் பேதி நின்று உடல் நலம் பெறும். முக்கியமாக மந்தாரை கக்குவான் இருமல், ஆஸ்துமா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, சுவாச நோய்கள்,  ஆகியவற்றிக்கு வீட்டிலே இயற்கை மருந்து தயாரித்து பயன்படுத்தலாம். 

மந்தாரை இலைகள் வாதநோய், கால்வலி, தசைபிடிப்பு தொடர்புடைய வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. இதயநோய், படபடப்பு,  ஆகியவற்றை  குணப்படுத்துவதற்கும் இது பயன்படுகிறது. மேலும் வயிற்றுபோக்கு படுக்கையில் சிறுநீர்கழித்தல், அதிக பித்த நீரால் ஏற்படும் மலேரியா காய்ச்சல்,  பொடுகு, முடி உதிர்வதை குறைத்தல், மூலநோய் போன்ற அனைத்திற்கும் ஊமத்தையின் இலை பெரிதும் பயன்படுகிறது.   

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் வெந்தயக்கீரை

சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை . இது சத்து நிறைந்த கீரை. வெந்தயம் விதைகளின் மூலம் பயிரடப்படுகிறது. இது மூன்று மாதங்களில் பூத்துக் காய்த்துப் பலன் தந்துவிடும். கீரையாகப் பயன்படுத்துவதற்குப் பூக்கும் முன்னரேயே வெந்தயச் செடியைப் பிடுங்கிவிட வேண்டும். வெந்தயச் செடி இளம் பச்சை நிறமுடையது. 

சுமார் இரண்டரை அடி வரை வளரும். வீட்டுத் தோட்டத்திலும் தொட்டியிலும் இதை மிக எளிதாக வளர்க்க முடியும். வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். இதை துவரம்பருப்புடன் வேக வைத்து கூட்டாகச் செய்து சாப்பிடலாம். இந்தக் கீரையுடன் புளி சேர்த்து வேக வைத்தும் கூட்டு தயாரிக்கலாம். 
Normally used in cooking talaitan fenugreek spinch of fenugreek seeds. This nutrient-rich spinach. Fenugreek seeds growth through. This is the result of three months kayttu tantuvitum Booth. Fenugreek spinach before flowering plant used to pitunkivita. Fenugreek young green plant.

வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். 

குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது. வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக்கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும். 

நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரை ஒரு சிறந்த பத்திய உணவாகும். இதை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை ஆறும். இந்தக் கீரையை வதக்கி அதனுடன் வாதுமைப் பருப்பு, கசகச கோதுமை ஆகியவற்றைச் சேர்த்துப் பால்விட்டு அரைத்து நெய்விட்டுக் கிண்டி உட்கொண்டால் உடலுக்கு வலிமையும், வனப்பும் ஏற்படும். 

இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரையுடன் சீமைப்புள், அத்திப்பழம், திராட்சை ஆகியவை சேர்த்துக் கஷாயமிட்டு தேன் கலந்து உண்டால் மார்பு வலி, மூக்கடைப்பு ஆகிய நோய்கள் நீங்கும். மூலநோய், குடல் புண் போன்ற நோய்களுக்கும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகத் திகழ்கிறது. வெந்தயக் கீரையை அரைத்துச் சூடு செய்து வீக்கங்கள் மீது பூசினால் வீக்கம் குறையும். இவ்வாறு செய்வதால் தீப்புண்களும் குணமாகும். இந்தக் கீரையை சீமை அத்திப்பழத்துடன் சேர்த்துக் கரைத்துக் கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் அவை விரைவில் பழுத்து உடையும். 

வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் உள்ளது. இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. வெந்தயக் கீரை சீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது. 

சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. மூளை நரம்புகளைப் பலப்படுத்துகிறது. வயிற்றுக் கட்டி, உடல் வீக்கம், சீதபேதி, குத்திருமல், வயிற்று வலி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது. வெள்ளைப் பூசணிக்காய் சாம்பாரில் வெந்தயக் கீரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் பெருத்த உடல் இளைக்கும்.

அல்சரை போக்கும் கீரை

கீரை இயற்கையின் பரிசு. தினமும் உணவில் கீரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கீரையில் வைட்டமின் ஏ,  கே, டி மற்றும் தாதுபொருட்கள் அடங்கியுள்ளன. கீரையில் அடங்கியுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நல்ல மூல ஆதாரமாக விளங்குகின்றது.. 

கீரை புற்றுநோய்கெதிரான மற்றும் அழற்சியை தடுக்கின்ற நோய்யெதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது. குழந்தைகளுக்கு கீரைகளை கொடுத்து வளர்க்க  வேண்டும். கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு ஆரோக்கியமான பலன்களை தருகிறது. கீரை, காய்கறிகள், மற்றும் பழங்கள்  சேர்த்து கலந்து ஜீஸ் செய்து சாப்பிடலாம்.  

கீரையை ப்ரீசரில் வைத்தாலும் அதன் பலன் குறையாது. என்றாலும் கீரைகளை வாங்கிய நாட்களிலே சமையல் செய் சாப்பிட வேண்டும். கீரை  சாப்பிடுவதால் கண்களுக்கான பிரச்சனை எதுவும் ஏற்படாது மேலும் உடல் எலும்புகளை வலுவடையச் செய்கிறது. கீரை சாப்பிட்டால் செரிமானம்  சம்பந்தமான பிரச்சனைகளை தவிர்க்கிறது. Spinach is a gift of nature. Spinach is advising doctors to be included in the daily diet.


அல்சரால் அவதி படுகின்றவர்கள் கீரையை தினம் ஒரு வேளை உணவில் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் வயிறு சம்பந்தமான அனைத்து  பிரச்சனைகளுக்கும் இது சிறந்த தேர்வாக உள்ளது. பெருங்குடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுகிறது. தோல் பராமரிப்பிற்கும் கீரை  உதவிகிறது. 

கீரையில் வைட்டமின்கள் மற்றும் தாதுபொருட்கள் அடங்கியுள்ளதால் உலர்ந்த, அரிப்பு ஏற்படுத்த கூடிய தோல்களை உடையவர்களுக்கு இது உடனடி  நிவாரணியாக செயல்படுகிறது. இதய நோய்களை தடுக்கிறது. அதாவது கீரையில் அடங்கியுள்ள வைட்டமின் ஏ மற்றும் சி ஆக்ஸிஜனேற்றத்தை  தடுத்து கொழுப்பின் அளவை குறைத்து இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்துக்கு ஹோமோசைஸ்டீன் ரசாயன மருந்தாக உள்ளது. கீரையில் அடங்கியுள்ள  கரோட்டின்  புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்க உதவுகிறது. கர்ப்பபை புற்றுநோயால் பாதிக்கபடுபவர்களுக்கு கீரை சிறந்த ரசாயன மருந்தாக  உதவுகிறது.

வல்லாரையும் அதன் பயன்களும்

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது. கஷாயம், காசம், மேகம், போன்ற நோய்களைக் குணப்படுத்துவதில் வல்லாரை கீரை நிகரற்றது. இந்த கீரையை  பால் கலந்து அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட விழுதை நெல்லிக்காய் அளவு திரட்டி உண்ண வேண்டும். இப்படி இந்த விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து அளமை தோற்றம் திரும்பும். 
 Vallarai becoming capable of so much spinach. Brew, cough, cloud, vallarai in treating diseases such as spinach unrivaled.

எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் வல்லாரை இலையால் செய்யப்பட்ட மாத்திரை குணமாக்கும். உடலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் புண்கள் ஆகியவற்றை வல்லாரை சரிசெய்து விடும் ஆற்றல் வாய்ந்தது. வல்லாரை இலையுடன் மிளகு, துளசி இலை, ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகுபதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு சுடுநீரில் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும். 

யானைக்கால் நோய் உள்ளவர்கள் இந்த இலையை தொடர்ந்து காலில் வைத்து கட்டி வந்தால் யானைக்கால் நோய் எளிதில் குணமாகும். வல்லாரை இலையை அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் விரை வீக்கம், வாயுவீக்கம், தசை சிதைவு, போன்றவை குணமாகிவிடும். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. 

மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரசுவதிக் கீரை யென்றும் அழைக்கின்றனர். இரத்த சுத்திகரிப்பு வேலையைச் சிறப்பாக செய்கிறது. தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது. இக்கீரையை கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும். 

சிவப்பு கீரையும் பயன்பாடும்

கீரையில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு கீரையும் உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. மேலும் பச்சை நிறம் கொண்ட  கீரைகளை விட கவர்ச்சிகரமான தோற்றம் கொண்ட சிவப்பு கீரையில் தாவர ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக சிவப்பு கீரையில்  அதிக இரும்பு சத்து காணப்படுவதால் ஊட்டச்சத்துகளை இரத்தத்தில் சேர்க்கிறது. 

கூடுதலாக சிவப்பு கீரையில் வைட்டமின் ஏ,பி,சி மற்றும் சி பொட்டாசியம், பாஸ்பரஸ் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு 100 கிராம் கீரையிலும் 45  கிலோ கலோரி, புரதம் 3.5 கிராம், 0.5 கிராம் கொழுப்பு, 6.5 கிராம் கார்போஹைட்ரேட், 267மிகி கால்சியம், பாஸ்பரஸ் 67மில்லி கிராம், இரும்பு 3.9  மில்லி கிராம், விழித்திரை 1827 மெக்ஜி, 0:08 தயாமின் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் 60 மில்லி கிராம் கொண்டு செயல்படுகிறது. 

முக்கியமாக கீரையில் பீட்டா கரோட்டின், லுடீன், குளோரோபில், ஃபோலிக் அமிலம் மற்றும் மாங்கனீசு கொண்டிருக்கிறது. எந்த வகையான கீரையாக  இருந்தாலும் அவை ரத்தசோகை, வறிற்று கடுப்பு, கபம், நோய் எதிர்ப்புசக்தி, கல்லீரல், ஆம்பியண்ட் காய்ச்சல் போன்றவற்றிக்கு தீர்வு வழங்குகிறது.  கீரை புற்றுநோயை தடுப்பதோடு மட்டுமல்லாமல் கீரையில் நார்சத்துகள் கொண்டுள்ளதால் மலச்சிக்கல், செரிமான கோளாறுகளையும் நீக்குகிறது. 
 Many varieties of spinach, green like spinach, spiny amaranth, spinach and spinach red forest.

அதிக வெப்பத்தில் கீரையை சமைக்கும் போது கீரை சேதமடையாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். கீரை வேகவைக்கும் போது  சேதமடைந்தால் கீரையில் உள்ள பெஸ்பன் பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு போதை மருந்தாக செயல்படும். நார்சத்து உணவான  கீரை பெருங்குடல், புற்றுநோய், நீரிழிவு, அதிக கொழுப்பு, எடைகுறைத்தல் போன்றவைக்கு சிவப்பு கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. 

சிறுநீரகத்தை மேம்படுத்தி மகப்பேறு காலத்தில் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. சிறுநீரகத்தை சுத்தபடுத்த வேண்டும் என்றால் ரத்தத்தை சுத்தபடுத்திய  பின்னர் காய்கறி போல கீரையை சாப்பிடலாம். ரத்தசோகை உள்ளவர்கள் 2கைப்பிடி சிவப்பு கீரைகளை எடுத்து சீராகும் வரை பிசைந்து அதில்  1டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஸ்டெயனைடு சேர்க்கவும். பின்னர் தேன் மற்றும் முட்டை 1 தேக்கரண்டி சேர்க்கவும். இந்த பானத்தை வாரத்தில் ஒரு  முறை குடிக்கலாம். வயிற்றுகடுப்பு இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் எளிதில் குணமாகும். பின்னர் கீரையை சுத்தம் செய்து உப்பு சேர்த்த வேக  கைவைத்து ஜீஸ் செய்து சாப்பிடலாம். 

நோய் வராமல் தடுக்க தினமும் 100 கிராம் கீரையை ஒரு வேளையாவது உணவில் சேர்த்து உடல் நலத்தை பாதுகாத்து கொள்வோம்.. ஏதேனும்  நோய் இருந்தாலும் கூட கீரையை உணவில் எடுத்துக்கொள்வதால் நோயிலிருந்து விடுதலை பெறலாம். 

வயிற்று புண்ணை குணப்படுத்தும் முளைக்கீரை

கீரையை தினமும் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். முளைக்கீரை அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்த கீரை. இக்கீரையில்  வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் கே, வைட்டமின் சி, போலேட் மற்றும் ரிபோப்லாவின் ஆகியவற்றை கொண்டுள்ளது.. நீர்சத்து  அதிகமுள்ள முளைக்கீரை வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் தன்மை கொண்டது. 

உடலுக்கு பலம் கூட்டும் சக்தியை கொண்டது. சிறுவர்களுக்கு இந்தக்கீரையை தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி அடைவார்கள்.  முளைக்கீரையில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், மங்கனீசு போன்ற கணிமங்களை கொண்டுள்ளது முளைக்கீரை.  கோதுமை, அரிசி, ஓட்ஸ், ஆகியவற்றில் கொண்டுள்ள புரதத்தை விட 30% அதிகபுரதத்தை கொண்டுள்ளது. இதயநோய், உயர் ரத்தஅழுத்தம்  உள்ளவர்களுக்கு முளைக்கீரை உதவுகிறது. 
Spinach need to take daily diet. Spinach is rich in nutrients and vitamins AMARANTH
முளைக்கீரை மிளகூட்டல்

என்னென்ன தேவை

முளைக்கீரை-1கட்டு
துவரம் பருப்பு-100 கிராம்
துருவிய தேங்காய்-1மூடி
சீரகம்-1ஸ்பூன்
காய்ந்த மிளகாய்-3
உளுந்தம் பருப்பு-1ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்-1ஸ்பூன்
கடுகு- 1/2ஸ்பூன்
பெருங்காயம்- ஒரு சிட்டிகை
உப்பு-தேவையான அளவு

எப்படி செய்வது
முதலில் துவரம் பருப்பை மஞ்சள்தூள் போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கீரையின் மண் நிரம்பிய வேர் பகுதியை நறுக்கிப் போட்டு  விட்டு மீதமிருக்கும் கீரையை தண்ணீரில் சுத்தமாக அலசி பொடிபொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். நறுக்கிய கீரையை தனியாக வேகவைத்து  எடுத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விடாமல் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயுடன் சீரகம், மற்றும் தேங்காய்  சேர்த்து மை போல மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விடவும். தீயை மிதமாக  வைத்துக்கொள்ளவும். பின்னர் கீரையையும் துவரம் பருப்பையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு கிளறவும். அரைத்த விழுதையும் சேர்க்கவும். கொஞ்சம்  தண்ணீர் சேர்த்து அனைத்தையும் ஒன்றாகச் சேரும்படி கிளறவும். எல்லாம் சேர்ந்து வந்ததும் இறக்கி வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்  எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும். சுவையான முளைக்கீரை மிளகூட்டல் தயார்.

அல்லி மலர்

நீரிழிவை கட்டுப்படுத்தும் 

 Allicceti blooming flowers than leaves in water that is more than maruttuvattanmai. Flowers on the white Nymphaeaceae, red   Nymphaeaceae appear to benefit both.
ல் பூக்கும் அல்லிச்செடியின் இலைகளை விட இதன் மலர்களுக்குத்தான் மருத்துவத்தன்மை அதிகம் உண்டு. மலர்களில் வெள்ளை அல்லி, சிவப்பு  அல்லி ஆகிய இரண்டுமே பயன் தரக்கூடியவையாகும். அல்லி பூவைச் சாறெடுத்து சிறிதளவு செந்தூரம் கலந்து அரை மண்டலமாக (இருபது நாள்)  தொடர்ந்து சாப்பிட்டு வர உஷ்ணம் தொடர்பான பிணிகள் சரிப்படும். வெள்ளை அல்லிப்பூவையும், ஆவாரம் பூவையும் சமஅளவு எடுத்து போதிய  அளவு சர்க்கரை சேர்த்து நீரிலிட்டுக் காய்ச்ச வேண்டும். 


பாகு பதமான உடன் இறக்கி ஆறவைத்து, காலையிலும் மாலையிலும் பசுவின் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர சிறுநீர் தாரை தொடர்பான  நோய்களைக் குணமாக்கும். நீரிழிவு நோய்கள் உள்ளவர்கள் தொடர்ந்து நாற்பது நாட்கள் இதனைச் சாப்பிட்டு வர குணம் பெறும். கண்சிவப்பு, கண்  எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் இவற்றுக்கு அல்லி இதழ்களை அரிந்து கண்களின் மீது வைத்து கட்டிவர நல்ல குணம் கிடைக்கும். அல்லி இலையை  நிழலில் உலர்த்தி பொடி செய்து பால் அல்லது தேனில் கலந்து உட்கொண்டு வர அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவைத் தடுக்கலாம். 

கோடைக் காலத்தில் உஷ்ணத்தினால் குழந்தைகளுக்கு கட்டிகள் ஏற்படும். இக்கட்டிகளை போக்க அல்லி இலையும் அவுரி இலையும் சம அளவில்  எடுத்து அரிசி கழுவிய நீரில் அரைத்து பூசினால் கட்டி உடைந்து குணமடையும். அவுரி இலைக்குப் பதில் ஆவாரைக் கொழுந்தை சேர்த்து அரைத்துப்  பூச அக்கி கொப்புளம் தீரும். சிவப்பு அல்லி இதழ்களுடன் செம்பருத்திப் பூ இதழ் சேர்த்து காய்ச்சி கசாயம் செய்து குடித்து வர இதயம் பலமடையும்.  இதய படபடப்பு நீங்கும். 

உடலில் ரத்தம் பெருகும். அல்லி விதையுடன் சம அளவு ஆவாரம் விதை சேர்த்து பொடியாக்கி 1-2 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர  வெள்ளை நோய் குணமாகும். ஆண்மை பெருகும். அல்லி விதையை சேகரித்து தூளாக்கி பாலுடன் கலந்து குடித்து வர தாது விருத்தி உண்டாகும்.  கல்லீரலும் மண்ணீரலும் பலமடையும். 

மாதுளை பூ

உடலை வலுவாக்கும் 


மாற We know that the medicinal properties of all types of flowers ..


எல்லா வகையான பூக்களுக்கும் மருத்துவ குணங்கள் இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம்.. பொதுவாக மாதுளை என்றதும் பலருக்கு ஞாபகத்துக்கு  வருவது மாதுளை பழம் தான். நாம் உண்னும் மாதுளை பழத்தில் வைட்டமின்கள், தாதுபொருட்கள் இருப்பது போல மாதுளை பூவும் சத்துகளை  கொண்டுள்ளது. இரத்த மூலத்திற்கும், இரத்த பேதிக்கும் மாதுளம் பூ மிகச் சிறந்த மருந்து பொருள்.

உலர்ந்த மாதுளைப்பூவை முப்பது கிராம் எடுத்து சேகரித்து பதினைந்து கிராம் வேலம் பிசின், மூடுன்று அரிசி எடை அபின் ஆகிய மூன்றையும்  சேர்த்து சூரணமாக்கி ஒரு வேளைக்கு ஆறு குன்றிமணி எடை வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம், இரத்த பேதி முதலியன குணமாகும். உலர்ந்த  மாதுளை மொக்கை இடித்து தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். கடுமையான இருமல் தோன்றினால் ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டு கொஞ்சம்  தண்ணீர் அருந்தினால் உடனே குணம் தெரியும்.

உலர்ந்த மாதுளைப்பூக்களை ஒரு தேக்கரண்டி எடுத்து தயிரில் கலந்து சாப்பிட்டால்  சீதபேதி சீக்கிரமாக சரியாகிவிடும். ரத்த பேதிக்கும் இதே  முறையில் கொடுக்க குணம் தெரியும். சீரகத்தோடு உலர்ந்த மாதுளைப்பூவைச் சேர்த்து மண் சட்டியில்  போட்டு  பொன் வறுவலாக வறுத்து கொள்ள  வேண்டும். இதனை இடித்து நன்கு தூளாக்கி வஸ்திர காயம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.இந்த சூரணத்தில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து  சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால்  மூலவாயு மாறும் உஷ்ணத்தில் தோன்றக்கூடிய பேதியும் குணமாகும்.

ஆரோக்கியமான உடல் நலம் பெற விரும்புபவர்கள் மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல்  வலுவடைந்து ஆரோக்கிய உடல் கிடைக்கும். சிலருக்கு வயிற்றில் வாயுக்களின் சீற்றத்தால் சிறிது சாப்பிட்டாலும் வயிறு நிறைந்தது போல்  காணப்படும். பசி என்பதே இவர்களுக்கு தோன்றாது.  இவர்கள் மாதுளம் பூவை கஷாயம் செய்து பனைவெல்லம் சேர்த்து அருந்தினால் வாயுக்கள்  சீற்றம் குறையும்.

கருப்பை நன்கு வலுவடைய மாதுளம் பூவை கஷாயம் செய்து காலை வேளையில் அருந்திவந்தால் கருப்பை வலுவடையும். மாதவிலக்கு நிற்கும்  காலமான மொனோபாஸ் காலத்தில்பெண்களுக்கு அதிகமான மன உளைச்சல் உண்டாகும். கை, கால், இடுப்பு மூட்டுகளில் வலி உண்டாகும். இவர்கள்  மாதுளம் பூவை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் இப்பிரச்சனை நீங்கும்.  அதுபோல வெள்ளை படுதலும் குணமாகும்.  

Sunday, February 3, 2013

பெண் குழந்தைகளின் பெயர்கள்

A

அபீர் ABEER عبير நறுமணம்

அதீபா ADEEBA أديبة நாகரீகமானவள் , அறிவொழுக்கம் நிறைந்தவள்

அஃத்ராஃ ADHRAAA عذراء இளமையான பெண்  - ஊடுருவிச் செல்ல முடியாத - தன் அசல் அழகை இழக்காத ஒரு (பழைய) முத்து

அஃபாஃப் ; AFAAF عفاف கற்புள்ள - தூய்மையான

அஃபீஃபா AFEEFA عفيفة கற்புள்ள – தூய்மையான

அஃப்னான் ; AFNAAN أفنان வேற்றுமை

அஃப்ராஹ் AFRAAH أفراح மகிழ்ச்சி

அஹ்லாம் AHLAAM أحلام கனவுகள்;

அலிய்யா ALIYYA علية உயர்ந்தவள் - மகத்தானவள்  - நபிதோழி ஒருவரின் பெயர்

அல்மாசா ALMAASA ألماسة வைரம்

அமானி AMAANI أماني பாதுக்காப்பான - அமைதியான

அமல் AMAL أمل நம்பிக்கை - விருப்பம்

அமதுல்லா AMATULLAH أمة الله இறைவனின் அடிமை – இறைவனின் பணிப்பெண்

அமீனா AMEENA أمينة நம்பிக்கைகுரியவள்

அமீரா AMEERAAMNIYYA أميرة இளவரசி- பணக்காரி

அம்னிய்யா AMNIYYA أمنية ஆசை- விருப்பம்

அன்பரா ANBARA عنبرة அம்பர் வாசனையுள்ள

அனீசா ANEESA أنيسة நற்பண்புகளுள்ளவள்; - கருணையுள்ளவள்-; நபித்தோழியர் சிலரின் பெயர்

அகீலா AQEELA عقيلة புத்திசாளியானவள்- காரணத்தோடு பரிசளிக்கப்பட்டவள்- நபித் தோழி ஒருவரின் பெயர்

அரிய்யா ARIYYA أرية ஆழ்ந்த அறிவுள்ளவள்

அர்வா ARWA أروي கண்ணுக்கினியவள்- நபித்தோழி ஒருவரின் பெயர்

அஸீலா ASEELA أصيلة சுத்தமான - பெருந்தன்மையின் - பிறப்பிடம்

அஸ்மா ASMAA أسماء பெயர்கள் (அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ; மகள்களில் ஒருவரின் பெயர்)

அஃதீர் ATHEER أثير ஆதரவான - தேர்ந்தெடு

அதிய்யா ATIYYA عطية நன்கொடை - பரிசு

அவாதிஃப் AWAATIF عواطف இரக்கமுள்ளவள் - பிரியமுள்ளவள்

அவ்தா AWDA عودة திரும்பச் செய்தல் - பலன்

அளீமா ALEEMA عظيمة மகத்தானவள் - உயரமானவள் - புகழ்மிக்கவள்

அஸீஸா AZEEZA عزيزة பிரியமானவள் - பலம் பொறுந்தியவள்

அஸ்ஸா AZZA عزة மான் - நபித்தொழியர் சிலரின் பெயர்

ஆபிதா AABIDA عابدة வணங்க கூடியவள்

ஆதிலா AADILAعالة நேர்மையானவள்

ஆயிதா AAIDA عائدة சுகம் விசாரிப்பவள் - திரும்பச் செய்பவள் ; - பலன்

ஆயிஷா AAISHA عائشة உயிருள்ள - முஃமின்களின் அன்னையரின் ஒருவர் ; மற்றும் பல நபிதோழியரின் பெயர்

ஆமினா AAMINA اَمية அமைதி நிறைந்தவள் ; - நாயகம் ஸல்லல்லாஹு; அலைஹி வஸல்லம் அன்னவர்களின் தாயார் பெயர்

ஆனிசா AANISA أنسة நற்பண்புகளுள்ளவள்

ஆரிஃபா AARIFA عارفة அறிமுகமானவள்

ஆஸிமா AASIMA عاصمة பாதுக்காப்பானவள் ; - தீய செயல்களிருந்து விலகியவள்

ஆசியா AASIYA اَسية ஃபிர்அவ்னின் மனைவியின் பெயர் - மிகச் சிறந்த நான்கு பெண்மணிகளுள் ஒருவர்

ஆதிஃபா AATIFA عاطفة இரக்கமுள்ளவள் - பிரியமுள்ளவள்

ஆதிகா AATIKA عاتكة தூய்மையானவள் ;. நபிதோழியரின் சிலரின் பெயர்

ஆயாத் AAYAAT اَيات வசனங்கள் - அற்புதங்கள்


B

பத்திரிய்யா BADRIYYA بدرية பூரண சந்திரன்- பதினாளாம் நாள்; இரவின் பிறை 

பஹீஜா BAHEEJA بهيجة சந்தோஷம்- மகிழ்ச்சியானவள்

பஹிரா BAHEERA بهيرة புகழ் பெற்றவள்

பாஹியா BAHIYYA باهية ஒளிரும் முகமுடையவள்

பஹிய்யா BAHIYYA بهية ஒளிரக் கூடிய அழகான

பய்ளா BAIDAA بيضاء வெண்மை - பிரகாசம்

பலீஃகா BALEEGHA بليغة நாவன்மை மிக்கவள் - படித்தவள்

பல்கீஸ் BALQEES بلقيس சபா நாட்டு அரசியின் பெயர்

பரீய்யா BARIYYA بريئة குற்றமுள்ளவள்

பஸீரா BASEERA بصيرة விவேகமானவள் - புத்திநிறைன்தவள்

பஷாயிர் BASHAAIR بشائر அனுகூலமாகத் தெரிவி

பஷிரா BASHEERA بشيرة நற்செய்தி சொல்பவள்

பஸ்மா BASMA يسمة புன்முறுவல்

பஸ்ஸாமா BASSAAMA بسامة மிகவும் புன்முறுவலிப்பவள்

பதூல் BATOOL بتول கற்புள்ள - தூய்மையான – இறைதூதர்

பாஹிரா BAAHIRA باهرة மரியாதைக்குரியவள்

பாசிமா BAASIMA புன்முறுவலிப்பவள்

புரைதா URAIDA بريدة குளிரான

புஸ்ரா BUSHRA بسرة நற்செய்தி

புஃதைனா BUTHAINA بثينة அழகானவள் - நபித்தோழி ஒருவரின் பெயர்

 


D

தாமிரா DAAMIRA ضامرة மெலிந்தவள்

தானியா DAANIYA دانية அருகிலுள்ளவள்

தலாலா DALAALA دلالة வழிகாட்டுபவள்

தீனா DEENA دينة கீழ்படிந்த

தாஹிரா DHAAHIRA ظاهرة ஆச்சரியமான

ஃதாகிரா DHAAKIRA ذاكرة (அல்லாஹ்வை) நினைப்பவள்

ஃதஹபிய்யா DHAHABIYYA ذهبية தங்கமானவள்

ஃதகிய்யா DHAKIYYAذكية புத்தி கூர்மையானவள்

ளரீஃபா DHAREEFA ظريفة நேர்த்தியானவள்

தியானா DIYAANA ديانا நம்பிக்கை மார்க்கம்

ளுஹா DUHA ضهى முற்பகல்

துஜா DUJAA دجي இருள் – வைகறை - இருட்டு

துர்ரா DURRA درة ஒருவகை பச்சைக்கிளி – முத்து - நபித்தொழியர் சிலரின் பெயர்

துர்ரிய்யா DURRIYYA درية மின்னுபவள் 

F


ஃபஹீமா FAHEEMA فهيمة அறிவானவள்


ஃபஹ்மீதா FAHMEEDA فهميدة அறிவானவள் 


ஃபய்ரோஜா FAIROOZA فيروزة விலையுயர்ந்த கல்

ஃபகீஹா FAKEEHA فكيهة நகைச்சுவை உணர்வுள்ள

ஃபராஹ் FARAAH فراح மகிழ்ச்சி - இன்பமுட்டு

ஃபரீதா FAREEDA فريدة இணையற்றவள் - தனித்தவள் - விந்தையானவள்

ஃபர்ஹா FARHA فرحة சந்தோஷம்

ஃபர்ஹானா FARHAANA فرحانة சந்தோஷமானவள்

ஃபர்ஹத் FARHAT فرحت சந்தோஷம்

ஃபஸீஹா FASEEHA فصيحة நாவன்மையுள்ளவள் - சரளமான

ஃபத்ஹிய்யா FAT'HIYAA فتحية ஆரம்பமானவள்

ஃபதீனா FATEENA فطينة திறமையானவள் - சாமர்த்தியசாலி - சுறுசுறுப்புமிக்கவள்

ஃபவ்கிய்யா FAWQIYYA فوقية மேலிருப்பவள்

ஃபவ்ஜானா FAWZAANA فوزانة வெற்றி பெற்றவள்

ஃபவ்ஜிய்யா FAWZIA فوزية வெற்றி பெற்றவள்

ஃபாதியா FAADIA فادية பிரபலமானவள் - தலைசிறந்தவள்

ஃபாதியா FAADILA فاضيلة மற்றவர்களுக்காக தன்னைத் தியாகம் செய்பவள்

ஃபாஇதா FAAIDA فايدة பலன்

ஃபாயிகா FAAIQA فائقة மேலானவள் விழிப்பானவள்

ஃபாயிஜா FAAIZA فائزة வெற்றி பெறக்கூடியவள்

ஃபாலிஹா FAALIHA فالحة வெற்றி பெற்றவள்

ஃபாத்திமா FAATIMA فاطمة தாய்ப்பால் குடிப்பதை மறந்தவள் - நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் மகளின் பெயர்

ஃபாதினா FAATINA فاطينة வசீகரிக்கப்பட்டவள்- திறமையானவள்

ஃபிள்ளா FIDDA فضة வெள்ளி

ஃபிக்ரா FIKRA فكرة எண்ணம் - சிந்தனை

ஃபிக்ரிய்யா FIKRIYYA فكرية சிந்திப்பவள்

ஃபிர்தவ்ஸ் FIRDAUS فردوس தோட்டம் - திராட்சை செடி நிறைந்துள்ள இடம்- சுவர்க்கத்தில் ஒரு வகையின் பெயர்

ஃபுஆதா FUAADA فؤادة இதயம்

G

ஃகானியா GAANIYA غانية அழகானவள்

ஃகய்ஃதா GAITHA غيثة உதவி

ஃகாதா GHAADA غادة இளமையானவள்

ஃகாலிபா GHAALIBA غالبة வெற்றி பெற்றவள்

ஃகாலியா GHAALIYA غالية விலை உயர்ந்தவள்- விலைமதிப்பற்றவள் - நேசிக்கப்படுபவள்

ஃகாஜியா GHAAZIYA غازية பெண் (புனிதப்) போராளி

ஃகாய்தா GHAIDAA غيداء மென்மையானவள்

ஃகஜாலா GHAZAALA غزالة மான்- உதய சூரியன்

ஃகுஜய்லா GHUZAILA غزيلة சூரியன்; (போன்று மிளிரக்கூடியவள்)

H

ஹபீபா HABEEBA حبيبة நேசிக்கப்படுபவள் - நபித்தோழியர் பலரின் பெயர்

ஹத்பாஃ HADBAAA هدباء நீண்ட புருவங்கள் உடையவர்

ஹதீல் HADEEL هديل அன்புடன் அளவளாவு - புறாவை போல் சத்தமிடு

ஹதிய்யா HADIYYA هدية அன்பளிப்பு - வழிகாட்டுபவள்

ஹஃப்ஸா HAFSA حفصة மென்மையானவள் – சாந்தமானவள் - முஃமின்களின் அன்னையர்களின் ஒருவரின் பெயர்

ஹைஃபா HAIFAAA هيفاء மெலிந்தவள்

ஹகீமா HAKEEMA حكيمة நுண்ணறிவானவள் - நபித்தோழி ஒருவரின் பெயர்

ஹலீமா HALEEMA حلينة நற்குணம் உள்ளவள் - நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களை வளர்த்த பெண்மணியின் பெயர்

ஹமாமா HAMAAMA حمامة புறா - நபித்தோழி ஒருவரின் பெயர்

ஹம்தா HAMDA حمدة புகழ்

ஹம்தூனா HAMDOONA حمدونة அதிகம் புகழ்பவள்

ஹமீதா HAMEEDA حميدة போற்றப்படக்கூடியவள்

ஹம்னா HAMNA حمنة கருஞ்சிவப்பு நிறமுள்ள சுவையான - ஒருவகை திராட்சை (நபித்தோழி ஒருவரின் பெயர்)

ஹம்ஸா HAMSA همسة இரகசியம் பேசு

ஹனாஃ HANAAA هيناء மகிழ்ச்சி

ஹனான்; HANAAN حنان அன்பு - அனுபவம்

ஹனிய்யா HANIYYA هنية மகிழ்ச்சியானவள்

ஹனூனா HANOONA حنونة பிரியமுள்ளவள்

ஹஸனா HASANA حسنة நற்காரியம்

ஹஸீனா HASEENA حسينة அழகானவள்

ஹஸ்னா HASNAA حسناء அழகானவள் - வசீகரமானவள்

ஹவ்ரா HAWRAA حوراء கருப்பு கண்களுள்ள அழகானவள்

ஹஜீலா HAZEELA هزيلة மெலிந்தவள் (நபித்தோழி ஒருவரின் பெயர்)

ஹாதியா HAADIYA هادية வழி காட்டுபவள் - தலைவி

ஹாபிளா HAAFIZA حافظة (குர்ஆனை) மனனம் செய்தவள்

ஹாஜரா HAAJARA هاجرة நபி இப்ராஹீம் (அலைஹி ஸலாம்) அவர்களின் மனைவியின் பெயர்

ஹாகிமா HAAKIMA حاكمة நுண்ணறிவானவள்

ஹாலா HAALA هالة சூரியனையும் சந்திரனையும் சுற்றியுள்ள ஒளிவட்டம் - பெரும் புகழ்

ஹாமிதா HAAMIDA حامدة (இறைவனைப்) புகழ்பவள்

ஹானியா HAANIYA هانية மகிழ்ச்சியானவள்

ஹாரிஃசா HAARITHA جارثة சுறுசுறுப்பானவள்

ஹாஜிமா HAAZIMA حازمة உறுதியானவள் - திடமானவள்

ஹிபா HIBA هبة தானம்

ஹிக்மா HIKMA حكمة நுண்ணறிவு

ஹில்மிய்யா HILMIYYA حلمية பொறுத்துக் கொள்பவர்

ஹிம்மா HIMMA همة மனோபலம் தீர்மானம்

ஹிஷ்மா HISHMA حشمة வெட்கப்படுபவள்

ஹிஸ்ஸா HISSA حصة பங்கு – பாகம்

ஹிவாயா HIWAAYA هواية மனதிற்குகந்த - பொழுதுப்போக்கு

ஹுதா HUDA هدي வழிக்காட்டி

ஹுஜ்ஜா HUJJA حجة ஆதாரம் - சாட்சி

ஹுமைனா HUMAINA همينة தீர்மானிக்க கூடியவள்

ஹுமைரா HUMAIRA حميراء சிவப்பு நிறமுள்ள - அழகானவள்

ஹுஸ்னிய்யா HUSNIYYA حسنية அழகுத் தோற்றம் வாய்ந்தவள்

ஹுவய்தா HUWAIDA هويدة சாந்தமான

I

இப்திஸாம்; IBTISAAM إبتسام புன்முறுவல்

இப்திஸாமா IBTISAAMA إبتسامة புன் சிரிப்பு

இஃப்ஃபத்; IFFAT عفت நேர்மையான

இல்ஹாம் ILHAAM إلهام உள்ளுணர்வு உதிப்பு

இம்தினான்; IMTINAAN إمتنان நன்றியுள்ள

இனாயா INAAYA عناية கவனி – பரிவு செலுத்து – ஆலோசனை

இன்ஸாப்; INSAAF إنصاف நீதி நேர்மை

இந்திஸார் INTISAAR إنتصار வெற்றி

இஸ்ரா ISRAA إسراء இரவுப் பயணம்

இஜ்ஜா IZZA عزة மரியாதை கீர்த்தி

ஈமான் IMAAN إيمان நம்பிக்கை

J

ஜதீதா JADEEDA جديدة புதியவள்

ஜலீலா JALEELA جليلة மதிப்புக்குரியவள்

ஜமீலா JAMEELA جميلة அழகானவள்

ஜன்னத் JANNAT جنة தோட்டம் – சொர்க்கம்

ஜஸ்ரா JASRA جسرة துணிவுள்ளவள்

ஜவ்ஹரா JAWHARA جوهرة ஆபரணம் – இரத்தினக்கல்

ஜாயிஸா JAAIZA جائزة பரிசு

ஜீலான் JEELAAN جيلان தேர்ந்தெடுக்கப்படுதல்

ஜுஹைனா JUHAINA جهينة இருள் குறைவான இரவு

ஜுமானா JUMAANA جمانة முத்து விலை மதிப்பற்ற கல்

ஜுமைமா جميمةة ஒருவகை தாவாம்

ஜுவைரிய்யா JUWAIRIYA جويرية முஃமின்களின் அணைகளின் ஒருவரின் பெயர்



K


கதீஜா KHADEEJA خديجة அறிவால் முதிர்ந்த குழந்தை , முஃமீன்களின் தாய்

கபீரா KABEERA كبرة பெரியவள் – மூத்தவள் – ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்

கலீலா KHALEELA حليلة நெருங்கிய ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்

கவ்லா KHAWLA خولة பெண்மான் – ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்

கமீலா KAMEELA كميلة நிறைவானவள்

கரீமா KAREEMA قريمة தாராள மனமுடையவள் – விலை மதிப்பற்ற

கவ்கப் KAWKAB كوكب நட்சத்திரங்கள்

கஃவ்தர் KAWTHAR كوثر நிறைந்த – சுவர்க்கத்தின் உள்ள ஒரு நீருட்டின் பெயர்

காமிலா KAAMILA كاملة நிறைவானவள்

காதிமா KAATIMA كاتمة மற்றவர்களின் ரகசியத்தை பாதுகாப்பவள்

காளீமா KAAZIMA كاظمة கோபத்தை அடக்குபவள்

காலிதா KHAALIDA خالدة நிலையானவள் (ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர் )

கைரா KHAIRA خيرة நன்மை செய்பவள்

கைரிய்யா KHAIRIYA خيرية தரும சிந்தனையுள்ளவள்

குலாத் KHULOOD خلود எல்லையற்ற அந்தமில்லாத

கிஃபாயா KIFAAYA كفاية போதுமான

கினானா KINAANA كنانة அம்பாறாத்துணி - பாலஸ்தீனத்தில் உள்ள ஒரு இடத்தின் பெயர்

குல்தூம் KULTHUM كلثم அழகானவள் – அழகாக நெற்றியுடையவள்

L

லபீபா LABEEBA لبيبة விவேகமானவள், புரிந்துகொள்பவள்

லதீஃபா LATEEFA لطيفة மனதிற்குகந்தவள்

லயாலி LAYAALI ليالي இரவான

லாயிகா LAAIQA لائقة பொருத்தமானவள்

லைலா LAILA ليلى ஸஹாபி பெண்மணி சிலரின் பெயர்

லுபாபா LUBAABA لبابة முக்கியமானவள் ஸஹாபி பெண்மணி சிலரின் பெயர்

லுப்னா LUBNA لبنى பால் வரும் மரம்

லுத்ஃபிய்யா LUTFIYYA لطفبة நேர்த்தையானவள்


M

மதீஹா MADEEHA مديجة மெச்சத் தகுந்தவள்

மஹா MAHAA مهاة மான்

மஹ்பூபா MAHBOOBA محبوبة நேசிக்கப்படுபவள்

மஹ்தியா MAHDEEYA مهدية நேர்வழிகாட்டப்பட்டவள்

மக்ளுளா MAHDHOODHA محظوظة; அதிர்ஷ்டசாலி

மஹ்மூதா MAHMOODA محمودة புகழத்தக்கவள்

மஜ்திய்யா MAJDIYYA مجدية மகத்துவம் மிக்க

மஜீதா MAJEEDA مجيدة மகத்துவம்மிக்க

மலிஹா MALEEHA مليحة அழகானவள்

மலிகா MALEEKA مليكة அரசி – பல ஸஹாபி பெண்மணிகளின் பெயர்

மனாஹில் MANAAHIL مناهل நீருற்று

மனாள் MANAAL منال பரிசு

மனரா MANAARA منارة கோபுரம்

மர்ளிய்யா MARDIYYA مرضية திருப்தி அடையப் பெற்றவள் – இனியவள்

மர்ஜானா MARJAANA مرجانة முத்து – பவளம்

மர்வா MARWA مروة மக்காவில் உள்ள புகழ்பெற்ற மலைக்குன்று

மர்ஸூகா MARZOOQA مرزوقة (இறைவனால்) ஆசிர்வதிக்கப்பட்டவள்

மஸ்ஊதா MAS'OODA مسعودة அதிர்ஷ்டசாலியானவள்

மஸ்ரூரா MASROORA مسرورة மகிழ்ச்சியானவள்

மஸ்தூரா MASTOORA مستورة கற்புள்ளவள் – தூய்மையானவள்

மவ்ஹிபா MAWHIBA موهبة திறமையானவள்

மவ்ஜூனா MAWZOONA موزونة சமநிலையுடையவள்

மய்யாதா MAYYAADA ميادة ஊசலாடுபவள்

மஜீதா MAZEEDA مزيدة அதிகம் – அதிகரித்தல்

மாஹிரா MAAHIRA ماهرة திறமையானவள்

மாஜிதா MAAJIDA ماجدة மேன்மை பொருந்தியவர்

மாரியா MAARIYA مارية ஒளி பொருந்தியவள் – (உம்முள் முஃமினீன்)

மாஜனா MAAZINA مازنة நீர் உள்ள மேகம் – கார்மேகம்

மைமூனா MAIMOONA ميمونة அதிர்ஷ்டசாலி

மைஸரா MAISARA ميسرة சுகமானவள்

மின்னா MINNAH منة இரக்கமுள்ள, கருணையுள்ள

மிஸ்பாஹ் MISBAAH مصباح பிரகாசமான

மிஸ்கா MISKA مسكة வாசனையுள்ள – சந்தனம்

முஈனா MU'EENA معينة உதவியாளர் – ஆதரவாளர்

முஹ்ஸினா MU'HSINA محصنة பாதுகாக்கப்பட்டவள்

முஃமினா MU'MINA مئمنة விசுவாசிப்பவள்

முபாரகா MUBAARAKA مباركة பரகத் செய்யப்பட்டவள்

முபீனா MUBEENA مبينة தெளிவானவள் – வெளிப்படையானவள்

முத்ரிகா MUDRIKA مدركة விவேகமுள்ளவள்

முஃபீதா MUFEEDA مفيدة பயன் தரக்கூடியவள்

முஃப்லிஹா MUFLIHA مفلحة வெற்றி பெறக்கூடியவள்

முஹ்ஜர் MUHJAR مهجة அன்பின் இருப்பிடம்

முஜாஹிதா MUJAAHIDA مجاهدة (புனிதப்போரில்) போராடியவள்

மும்தாஜா MUMTAAZA ممتازة புகழ்பெற்ற – தரம் வாய்ந்தவள்

முனா MUNA منى ஆசைகள்

முனிஃபா MUNEEFA منيفة தலைசிறந்தவள்

முனீரா MUNEERA منيرة ஒளிர்பவள்

முஃனிஸா MUNISA مئنسة களிப்பூட்டுபவள்

முன்தஹா MUNTAHA منتهى கடைசி எல்லை

முஸ்ஃபிரா MUSFIRA مسفرة ஒளிரக்கூடிய

முஷீரா MUSHEERA مشيرة ஆலோசனை கூறுபவள்

முஷ்தாகா MUSHTAAQA مشتاقة ஆவலுள்ளவள்

முதீஆ MUTEE'A مطيعة கீழ்படிபவள் – விசுவாசமுள்ள – ஸஹாபி பெண்மணி

முஸைனா MUZAINA مزينة இலேசான மழை- மழைமேகம்

முஸ்னா MUZNA مزنة வெண்மேகம்



N

நஈமா NA'EEMA نعيمة சுகமான – அமைதியான- ஆறுதல் அளிக்கக்கூடியவள்

நபீஹா NABEEHA نبيهة புத்தி கூர்மையுடையவள்

நபீலா NABEELA نبيلة உயர் பண்புடையவள்

நதா NADA ندي பனித்துளி பனி

நளீரா NADEERA نضيرة ஒளிவீசுபவள்

நதீரா NADHEERA نذيرة எச்சரிக்கை செய்பவள்

நதிய்யா NADIYYA ندية இனிய மனமுடையவள்

நஃபீஸா NAFEESA نفيسة விலை மதிப்பு மிக்க பொருள்  (ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்)

நஹ்லா NAHLA نحلة தேனீ

நஜீபா NAJEEBA نجيبة மேன்மை தாங்கியவள்

நஜீமா NAJEEMA نجيمة சிறு நட்சத்திரம்

நஜிய்யா NAJIYYA نجية நெருங்கிய தோழி – அந்தரங்கத் தோழி

நஜ்லா NAJLAA نجلاء அகன்ற கண்களுடையவள்

நஜ்மா NAJMA نجمة நட்சத்திரம்

நஜ்வா NAJWA نجوى அந்தரங்க பேச்சுக்கள்

நமீரா NAMEERA نميرة பெண் புலி

நகாஃ NAQAA نقاء தெளிவான

நகிய்யா NAQIYYA نقية சந்தேகமற்றவள் – தெளிவானவள்

நஸீபா NASEEBA نسيبة உயர்குலத்தில் பிறந்தவள்,
ஸஹாபி பெண்மணி சிலரின் பெயர்

நஸீஃபா NASEEFA نصيفة சமநிலையுடையவள்

நஸீமா NASEEMA نسيمة மூச்சுக்காற்று – சுத்தமான காற்று

நஸீரா NASEERA نصيرة ஆதரிப்பவள்

நஸ்ரின் NASREEN نسرين வெள்ளை ரோஜா

நவால் NAWAAL نوال ஆதரவு காட்டுபவள் – ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்

நவார் NAWAAR نوار நானமுல்லவர் (ஸஹாபி பெண்மணி ஒருவரின் பெயர்)

நவ்ஃபா NAWFA نوفة பெருந்தன்மையானவள்

நவ்வாரா NAWWAARA نوارة இதழ்கள் – பூக்கள்

நஜீஹா NAZEEHA نزيهة நேர்மையானவள்

நளீமா NAZEEMA نظيم பாடல் இயற்றுபவள்

நள்மிய்யா NAZMIYYA نظمية ஒழுங்கான – வரிசைக்கிரமமான

நாதியா NAADIYA نادية சங்கம்

நாஃபூரா NAAFOORA نافورة நீருற்று

நாயிஃபா NAAIFA نايفة உயர்ந்தவள்

நாஇலா NAAILA نائلة வெற்றி பெற்றவள்

நிஸ்மா NISMA نسمة தென்றல் காற்று

நூரா NOORA نورة பூ

நூரிய்யா NOORIYYA نورية பிரகாசிக்கக் கூடியவள்

நுஃமா NU'MA نعمة மகிழ்ச்சி

நுஹா NUHA نهى விவேகமுள்ளவள்

நுஸைபா NUSAIBA نسيبة சிறப்புக்குரியவள்

நுஜ்ஹா NUZHA نزهة உல்லாசபயணம் – சுற்றுலா





Q

கம்ரா QAMRAAA قمراء சந்திர ஒளி

காயிதா QAAIDA قائد தலைவி

கிஸ்மா QISMA قسمة பங்கு, ஒதுக்கீடு




R

ரஃபீஆ RAABIA رفيعة உன்னதமானவள்

ரப்தாஃ RABDAA ربداء அழகான கண்களுடையவள் – ஒரு நபித்தோழியின் பெயர்

ரளிய்யா RADIYYA رضية திருப்தியடைன்தவள் – இனியவள்

ரள்வா RADWA رضوة திருப்தியடைன்தவள்

ரஃபீதா RAFEEDA رفيدة நபித்தோழி ஒருவரின் பெயர்

ரஃபீகா RAFEEQA رفيقة தோழி – சினேகிதி

ரஹீமா RAHEEMA رحيمة கருனையுள்ளவள்

ரஹ்மா RAHMA رحمة கருணை – அன்பு

ரய்ஹானா RAIHAANA ريحانة நல்ல மனமுள்ள தாவரம்

ரைதா RAITA ريطة நபித்தோழி ஒருவரின் பெயர்

ரம்லா RAMLA رملة நபித்தோழி ஒருவரின் பெயர்

ரம்ஜா RAMZA رمزة அடையாளக்குறி

ரம்ஜிய்யா RAMZIYYA رمزية அடையாளம்

ரந்தா RANDA رندة நறுமணமுள்ள ஒருவகை மரம்

ரஷா RASHAA رشا பெண்மான்

ராஷிதா RASHEEDA راشدة நேர்வழிகாட்டப்பட்டவள்

ரஷீகா RASHEEQA رشيقة நேர்த்தியானவள் – வசீகரமானவள்

ரவ்ளா RAWDA روضة புல்வெளி – பூங்கா

ரய்யானா RAYYANA ريانة இளமையான – புதிய

ரஜீனா RAZEENA رزينة அமைதியான

ராபிஆ RAABIA رابعة நான்காவது பஸ்ரா நகரின் பெண் துறவி ஒருவரின் பெயர்

ராபியா RAABIYA رابية மலைக்குன்று

ராளியா RAADIYA راضية இன்பகரமான – மகிழ்ச்சியான

ராஃபிதா RAAFIDA رافدة ஆதாரமளிப்பவள் – ஆதரவானவள்

ராஇதா RAAIDA رادية தலைவி – புதிதாக வந்தவள் – ஆராய்பவள்

ரானியா RAANIYA رانية கண்ணோட்டம்

ரீமா REEMA ريمة அழகான மான்

ரிப்ஃஆ RIF'A رفعة ஆதரவளிப்பவள்

ரிஃப்கா RIFQA رفقة கருனையானவள் – இறக்கம் காட்டுபவள்

ரிஹாப் RIHAAB رحاب அகலமான – விசாலமான

ருமான RUMAANA رمانة மாதுளம்பழம்

ருகைய்யா RUQAYYA رقية மேலானவள் – நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் புதல்விகளின் ஒருவரின் பெயர்

ருதய்பா RUTAIBA رتيبة குளிர்ச்சியான – புதிய

ருவய்தா RUWAIDA رويدا அன்பான – நிதானமான



S

ஸஃதா SA'DA سعدة அதிர்ஷ்டசாலி -  ஸஹாபி பெண்  ஒருவரின் பெயர்

ஸஃதிய்யா SA'DIYAA سعدية மகிழ்ச்சியானவள் – நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின், வளர்ப்பு தாயார் ஹலீமா நாயகி அவர்களின், வம்சப் பெயர்

ஸஈதா SA'EEDA سعيدة சந்தொஷமானவள் – ஆனந்தம் – ஸஹாபி பெண் ஒருவரின் பெயர்

ஸபாஹா SABAAHA صباحة வசீகரமானவள்

ஸபீஹா SABEEHA صبيحة அழகானவள்

ஸபீகா SABEEKA سبيكة விஷேச குணம்

ஸபிய்யா SABIYYA صبية இளமையானவள்

ஸப்ரின் SABREEN صبرين மிகுந்த பொறுமைசாலி

ஸப்ரிய்யா SABRIYYA صبرية பொறுமைசாலி - மனம்
தளராதவள்

ஸதீதா SADEEDA سديدة பொருத்தமான – சரியான (பார்வை)

ஸஃப்வா SAFAAA صافة மலர்

ஸஃபிய்யா SAFIYYA صفية தூய்மையானவள் – முஃமின்களின், அன்னியர்களின் ஒருவர்

ஸஃபாஃ SAFWA صبوة தெளிந்த – நேர்மையான

ஸஹர் SAHAR سحر வைகறை

ஸஹ்லா SAHLA سهلة அமைதியான – ஸஹாபி பெண்கள் சிலரின் பெயர்

ஸஜிய்யா SAJIYYA سجية குணம்

ஸகீனா SAKEENA سكينة மன அமைதி

ஸலீமா SALEEMA سليمة பத்திரமான – பரிபூரணமான

ஸல்மா SALMA سلمة அழகானவள்- இளமையானவள் ஸஹாபி பெண் ஒருவரின் பெயர்

ஸல்வா SALWA سلوى ஆறுதல்

ஸமீஹா SAMEEHA سميحة தர்ம சிந்தனையுள்ளவள்

ஸமீரா SAMEERA سميرة பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் கதை சொல்லி மகிழ்விப்பவள்

ஸம்ராஃ SAMRAA سمراء கருஞ் சிவப்பு நிறத் தோலுள்ளவள் – ஸஹாபி பெண்கள் சிலரின் பெயர்

ஸனா SANAAA سناء பிரகாசமான - அறிவான

ஸனத் SANAD سند ஆதாரம்

ஸாபிகா SAABIQA سابقة முன்னிருப்பவள் – முன்னோடி

ஸாபிரா SAABIRA صابرة பொறுமையானவள் – உறுதியானவள் – சகிப்புத் தன்மை கொண்டவள்

ஸாஃபிய்யா SAAFIYYA صافية தூய்மையான

ஸாஹிரா SAAHIRA ساهرة விழிப்பானவள்

ஸாஜிதா SAAJIDA ساجدة (இறைவனுக்கு) ஸுஜூது செய்பவள்

ஸாலிஹா SAALIHA صالجة நற்பண்புகளுள்ளவள்

ஸாலிமா SAALIMA سالمة ஆரோக்கியமான – குறைகளற்ற

ஸாமிகா SAAMIQA سامقة உயரமானவள்

ஸாமிய்யா SAAMYYA سامية உயர்ந்தவள்

ஸாரா SAARA سارة நபி இப்ராஹீம் (அலைஹி ஸலாம்) அவர்களின் மனைவியின் பெயர்

ஸாஜா SAJAA ساجا அமைதியான

ஸாதிகா SADEEQA صادقة தோழி

ஷாஃபியா SHAAFIA شافية குணம் தருபவள்

ஷஹீதா SAHHEEDA شهسدة (உயிர்) தியாகம் செய்தவள்

ஷாஹிதா SHAAHIDA شاهد சாட்சியானவள்

ஷாஹிரா SHAAHIRA شاهرة புகழ் பெற்றவள் – பலரும் அறிந்தவள்

ஷாகிரா SHAAKIRA شاكرة நன்றியுள்ளவள்

ஷாமிலா SHAAMILA شاملة பூரணமானவள்

ஷபீபா SHABEEBA شبيبة இளமையானவள்

ஷஃதா SHADHAA شذا சுகந்தம் – நறுமணம்

ஷஃபாஃ SHAFAAA شفائ நிவாரணம் - மனநிறைவு

ஷஃபீஆ SHAFEE'A شفيعة பரிந்து பேசுபவள்

ஷஃபீகா SHAFEEQA شفيقة அன்பானவள் – கருனையுள்ளவள்

ஷஹாதா SHAHAADA شهادة சாட்சியாக இருப்பவள்

ஷஹாமா SHAHAAMA شهامة தாராள மனமுள்ளவள்

ஷஹீரா SHAHEERA شهبرة புகழ் பெற்றவள்

ஷஹ்லா SHAHLA شعلائ நீல நிறக் கண்கள்

ஷய்மாஃ SHAIMAAA شيماء மச்சம்

ஷஜீஆ SHAJEE'A شجيعة துணிவுள்ளவள்

ஷகீலா SHAKEELA شكبلة அழகானவள்

ஷகூரா SHAKOORA شكورة மிகவும் நன்றியுள்ளவள்

ஷம்ஆ SHAM'A شمعة மெழுகுவர்த்தி

ஷமாயில் SHAMAAIL شمائل நன்னடத்தை

ஷமீமா SHAMEEMA شميمة நறுமணமுள்ள தென்றல்

ஷகீகா SHAQEEQA شقيقة உடன் பிறந்தவர்

ஷரீஃபா SHAREEFA شريفة பிரசித்தி பெற்றவள்

ஷுக்ரிய்யா SHUKRIYYA شكرية நன்றியுள்ள

ஸித்தீகா SIDDEEQA صديقة மிகவும் உண்மையானவள்

சீரின் SIREEN سيرين இனிப்பான இன்பகரமான நபித்தோழி ஒருவரின் பெயர்

சிதாரா SITAARA ستارة முகத்திரை – திரை

சுஹா SUHAA سها மங்கலான நட்சத்திரம்

சுஹாத் SUHAAD سهاد விழிப்பான

சுஹைலா SUHAILA سهيلة சுலபமான

சுகைனா SUKAINA سكينة அமைதியானவள் – இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளின் பெயர்

சுலைமா SULAMA سليمة நிம்மதி பெற்றவள்

சுல்தானா SULTANA سلطانة அரசி

சுமைதா SUMAITA صميتة அமைதியானவள் – நபித்தோழி ஒருவரின் பெயர்

சுமைய்யா SUMAYYA سمية உயர்ந்த்தவள் – இஸ்லாத்துக்காக உயிர் துறந்த முதல் பெண் ஸஹாபியின் பெயர்

சும்புலா SUMBULA سنبلة தானியக்கதிர்

சுந்துஸ் SUNDUS سمدوس பட்டு


T

தஹானி TAHAANI نهاني வாழ்த்து

தஹிய்யா TAHIYYA تحية வாழ்த்து

தஹ்லீலா TAHLEELA تحليلة லாஇலாஹா இல்லல்லாஹ் என்று கூறுபவள்

தமன்னா TAMANNA تمنى ஆசை – விருப்பம்

தமீமா TAMEEMA تميمة கவசம் – நபித்தோழி ஒருவரின் பெயர்

தகிய்யா TAQIYYA تفية இறையச்சமுடையவள்

தரீஃபா TAREEFA طريفة விசித்திரமானவள் – அரிதானவள்

தஸ்னீம் TASNEEM تسنيم சுவனத்தின் நீருற்று

தவ்ஃபீக்கா TAWFEEQA توفيقة இறைவன் மேல் ஆதரவு வைப்பவள்

தவ்ஹீதா TAWHEEDA توحيدة (இஸ்லாமிய) ஒரிறை கொள்கை

தய்யிபா TAYYIBA طيبة மனோகரமானவள்

ஃதம்ரா THAMRA ثمرة பழம் – பலன்

ஃதனாஃ THANAA ثناء புகழ் வார்த்தை

ஃதர்வா THARWA ثروة செல்வம்

தாஹிரா TAAHIRA طاهرة தூய்மையானவள் – இறைபக்தியுடையவள்

தாலிபா TAALIBA طالبة தேடுபவள் – மாணவி

தாமிரா TAAMIRA تامرة மிகுதியான

ஃதாபிதா THAABITA ثابتة நிலையானவள்

ஃதாமிரா THAAMIRA ثامرة செழிப்பான – பலனளிக்கும்

துஹ்ஃபா TUHFA تحفة நன்கொடை

துலைஹா TULAIHA طليحة சிறிய வாழைப்பழம் – நபித்தோழி சிலரின் பெயர்

துர்ஃபா TURFA طرفة அரிதான



U

உல்ஃபா ULFA ألفة பிரியம் – அன்பு

உல்யா ULYAA علياء உயர்ந்தவள்

உமைமா UMAIMA أميمة தாய் – ஒரு நபித்தோழியின் பெயர்

உமைரா UMAIRA عمريرة வாழ்வளிக்கப் பெற்றவள் - நபித்தொழியர் சிலரின் பெயர்

உம்மு குல்தூம் UMMU KULTHOOM أم كلثوم நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் புதல்விகளுள் ஒருவரின் பெயர்

உர்வா URWA عروة நட்புறவு பிணைப்பு



V

வாஃபிய்யா WAAFIYYA وافية விசுவாசமுள்ளவள்

வாஜிதா WAAJIDA واجدة அன்பு கொள்பவள்

வதீஅஹ் WADEE'A وديعة நம்பிக்கையானவள்

வள்ஹா WADHA وضحة புன்னகை புரிபவள்

வஃபாஃ WAFAAA وفاء நேர்மையான – விசுவாசமுள்ள

வஹீபா WAHEEBA وهيبة சன்மானமளிக்கப்பட்டவள்

வஹீதா WAHEEDA وحيدة இணையற்றவள்

வஜ்திய்யா WAJDIYYA وجدية உணர்ச்சிப்பூர்வமான காதலி

வஜீஹா WAJEEHA وجيهة சமுதாயத்தில் மதிப்புமிக்கவள்

வலீதா WALEEDA وليدة சிறு குழந்தை - பிறந்த பெண் குழந்தை

வலிய்யா WALIYYA ولية ஆதரவளிப்பவள் – நேசிப்பவள்

வனீஸா WANEESA ونيسة நட்பானவள்

வர்தா WARDA وردة ரோஜா

வர்திய்யா WARDIYYA وردية ரோஜாவைப் போன்றவர்

வஸீமா WASEEMA وسيمة பார்பதற்கினியவள்

வஸ்மா WASMAAA وسماء பார்பதற்கினிய

விதாத் WIDDAD وداد உள்ளன்போடு



Y
யாஸ்மீன் YAASMEEN ياسمين மல்லிகை பூ

யாஸ்மீனா YAASMEENA يامينة மல்லிகை பூ போன்றவள்



Z
ஸாஹிதா ZAAHIDA زاهدة தன்னலமற்றவள் – உலகாதய இன்பங்கலிளிருந்து விலகி இருப்பவள்

ஸாஹிரா ZAAHIRA زاهرة ஒளிரக்கூடிய – பிரகாசிக்கக்கூடிய

ஸாஇதா ZAAIDA زائدة வளர்ப்பவள்

ஸஹ்ராஃ ZAHRA زهرة பூ

ஸஹ்ரா ZAHRAA زهراء அழகான- பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் பட்டப் பெயர்

ஸைனப் ZAINAB زينب நறுமணம் வீசும் மலர் – நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் புதல்விகளில் ஒருவரின் பெயர் முஃமின்களின் அன்னையர் இருவரின் பெயர்

ஸைதூனா ZAITOONA زيتونة ஆலிவ் – ஒலிவம்

ஸகீய்யா ZAKIYYA زكية தூய்மையானவள்

ஸர்கா ZARQAA زرقاء நீலப்பச்சை நிறக் கண்கலுள்ளவள்

ஸீனா ZEENA زينة அழகு

ஸுபைதா ZUBAIDA زبيدة வெண்ணை – பாலாடை

ஸுஹைரா ZUHAIRA زهيرة அழகு மதி நுட்பமான

ஸுஹ்ரா ZUHRA زهرة அழகு மதி நுட்பமான

ஸஹ்ரிய்யா ZUHRIYAA زهرية பூ ஜாடி

ஸுல்பா ZULFA زلفة குளம் – குட்டை

ஸும்ருதா ZUMRUDA زمردة மரகதம் – பச்சைக்கல்

இஸ்லாம் என்றால் என்ன?


இஸ்லாம் என்றால் என்ன

இஸ்லாம் என்றால் சாந்தி, சமாதானம் என்பது பொருளாகும். இம்மையிலும், மறுமையிலும் சந்தியாக வாழ வழிவகுக்கும் மார்க்கமே இஸ்லாம். 

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் எத்தனை? அவை எவை

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் ஐந்து.

1. வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹுதஆலாவைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் அவனது திருத்தூதர் என்று சாட்சி கூறுதல்.

2. தினமும் ஐந்து நேரம் அல்லாஹ்வைத் தொழுதல்.

3. செல்வம் படைத்தவர்கள் ஏழைகளுக்கு ஏழை வரி செலுத்தல்.

4. ரமழான் மாதம் நோன்பு வைத்தல்.

5. பொருள் வசதியும், பிரயாண வசதியும், உடல் வலிமையும் உள்ளவர்கள் புனித மக்கவிற்குச் சென்று ஹஜ்ஜு என்னும் வணக்கம் புரிதல்.


ஈமான் (நம்பிக்கை வைத்தல்) என்றால் என்ன?

ஈமான் என்றால், அல்லாஹுத்தஆலா ஒருவன் என்றும், அவனது மலக்குகளைக் கொண்டும், அவனது வேதங்களைக் கொண்டும், அவனது ரசூல்மார்களைக் கொண்டும், மறுமை நாளைக் கொண்டும், நன்மையையும் தீமையும், அவனது கற்பனைப்படி நடைபெறுகின்றன என்றும் நம்பி உறுதி கொள்கிறேன் என்பதாகும். என்ற 6 விடயங்களைக் நம்பிக்கை கொள்ளுதல். 

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes