Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts

Monday, April 9, 2012

ரத்தக்கட்டுக் காயங்களை அலட்சியப்படுத்த வேண்டாம்


சாதாரணக் காயம்தானே’ என்று நாம் கவனிக்காமல் விட்டுவிடும் சின்னக்  காயங்கள்கூட சில நேரங்களில் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும். அந்த வகையைச் சேர்ந்ததுதான் ரத்தக்கட்டு.
விளையாடும்போதோ, எங்கேயாவது இடித்துக்கொள்ளும்போதோ அல்லது தவறி விழும்போதோ வெளிப்புறமாக ஏற்படுவதுதான் இந்த ரத்தக்கட்டு. ரத்தக்கட்டுக் காயங்களை அலட்சியப்படுத்தினால், நாளடைவில் அந்த இடத்தில் ரத்த அழற்சி ஏற்பட்டு, கட்டிகளாக மாறிவிடும். பாதிக்கப்பட்ட பகுதியை அறுவைச் சிகிச்சை செய்து அகற்ற வேண்டிய நிலைகூட ஏற்படலாம்'' என்கிறார் சித்த மருத்துவர் சிவராமன்.
உடல் உறுப்புகளில் அடி ஏற்படும்போது, தோலுக்கு அடியில் உள்ள மெல்லிய 'முடிவு ரத்த நாளங்கள்’மற்றும் தசை செல்களில் சிதைவு ஏற்படும். இதனால், தோல் பகுதியைக் கிழித்துக்கொண்டு ரத்தம் வெளியேற முடியாமல் தோலுக்கு உள்ளேயே தேங்கி நின்றுவிடும். இதைத்தான் ரத்தக்கட்டு    (Hematoma) என்கிறோம்.
பொதுவாகக் காயம் ஏற்பட்டவுடன் அதைக் குணப்படுத்தும் விதமாக பாதிக்கப்பட்ட இடத்தில் நிணநீர் (Lymph)  வந்து சேரும். காயமானது சிறிய அளவில் இருந்தால் நிணநீர் மூலம் தானாகவே குணமாகிவிடும். ஆனால், காயம் வலுவானதாக இருந்தாலோ, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலோ, இது சாத்தியம் இல்லை. இதுபோன்ற சூழலில் ரத்தக்கட்டைக் கரைக்க நிறைய வழிகள் இருக்கின்றன.
முதலில் அடிபட்ட இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
ஆமணக்கு இலை, நொச்சி இலை இரண்டையும் சம அளவு எடுத்து, விளக்கெண்ணையில் வதக்கி, வெள்ளைத் துணியில் வைத்துக் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். இதற்கு வீக்கத்தை உருக்கி ரத்தக்கட்டைப் போக்கும் தன்மை அதிகம்.
வெறும் விறலி மஞ்சளைப் பொடி செய்து, அரை ஸ்பூன் பொடியினை ஒன்றரை கப் தண்ணீரில் கலந்து, இளஞ்சூடாக்கி ரத்தக்கட்டு உள்ள இடத்தின் மேல் பத்து போடலாம். மஞ்சளுக்கு ரத்தக்கட்டைக் குணமாக்கும் தன்மை உண்டு.
சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் அமுக்கிராங்கிழங்குச் சூரணத்தை வாங்கி, ஒரு கோப்பை பாலில் அரை ஸ்பூன் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் ஐந்து நாட்கள் குடித்து வர, ரத்தக்கட்டு கரைந்துவிடும். அமுக்கிராங் கிழங்குச் சூரண மாத்திரைகளும் சாப்பிடலாம்.
கருஞ்சீரகத்தைப் பொடிசெய்து அதில் கால் ஸ்பூன் அளவு எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, பொடி அரிசிக் கஞ்சியில் போட்டுவேகவைத்துக் குடிக்கலாம். ஆனால், கர்ப்பிணிகளோ, கருத்தரிக்கும் நேரத்தில் உள்ள பெண்களோ கருஞ்சீரகம் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்'' என்கிறார் அக்கறையோடு.

Sunday, October 30, 2011

இன்றே தயாராகுங்கள் இலவச பயிற்ச்சிக்கு

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

இன்றே தயாராகுங்கள் இலவச பயிற்ச்சிக்கு

தமிழகத்தில் மத்திய அரசு சார்பில் சிறுபான்மை மக்களுக்கு பயன்பெறும் வகையில் பலவகையான சலுகைகளும் வகுப்புகளும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற சலுகைகளை பற்றியும் வகுப்புகளை பற்றியும் நம் முஸ்லீம் சமுதாயத்தின் மத்தியில் விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் அவைகளை நமது சமுதாய மக்கள் உபயோக படுத்துவதில்லை.இது போண்ற சலுகைகளை உபயோகபடுத்தாமல் 8வது முடித்தால் பாஸ்போர்ட் எடுத்து அரபு நாடுகளுக்கு சென்று அற்ப்ப ஊதியத்தில் குடுப்பத்தை பிரிந்து கஷ்ட்பட்டு கொண்டு இருகின்றனர். ஆனால் இலவசமாக வழங்கபடும் இது போண்ற பயிற்ச்சிகள் மூலம் இந்தியாவிலேயே நம்மால் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க முடிகின்றது என்பது அரபு நாடுகளில் படிப்பறிவில்லாமல் கஷ்ட்டபடும் எத்தனை முஸ்லீம்களுக்கு தெரியும்.??

அது போன்ற சலுகைகளில் ஒன்றான வேலை இல்லா சிறுபான்மையினர்களுக்கு இலவச திறன் வளப்பு பயிற்ச்சி திட்டத்தின் அடிப்படையில் சிறுபான்மையினறுக்கு பல்வேறு துறைகளில் இலவசமாக பயிற்ச்சிகள் அளிக்கபட உள்ளன.

இதில் ஆடை மற்றும் பின்னல் ஆடை, காலனி தயாரிப்பு, கம்யூட்டர் மற்றும் நெட்வோர்கிங், CAAD மற்றும் CAM , தோள் ஆடை மற்றும் பொருட்கள் தயாரிப்பு, பிளாஸ்ட்டிக் தொழில் நுட்பம், ஆடோமொபைல் தொழில் நுட்பம், எலக்ட்ரிகல்ஸ், ஏசி மற்றும் பிரிட்ஜ் மெகானிக், மென்பொருள் சேதனையாளர் தொடர்பான 10 நாட்கள் முதல் 12 மாதங்கள் வரையிலான பயிற்ச்சிகள் இலவசமாக அளிக்கபட உள்ளன.

வழங்கப்படும் பயிற்ச்சிகள மற்றும் நிறுவனங்களின் முழு விவரம்.
1.Apparel Training & Design Center
18-23, Readymade Garment Complex,Thiru.Vi.Ka Industrial Estate, Guindy, Chennai - 600032
Telephone : 044 - 22500121 / 22501221

Name of the CourseDurationQualification
Apparel Manufacturing Technology(AMT)12 Months10th Pass
Diploma in Knitwear Manufacturing Technology(DKMT)12 Months10th Pass
Apparel Pattern Making(APM)6 Months8th Pass
Smart Operator Courses SO-B45 Days5th Pass

2.Central Footwear Training Institute
65/1, GST Road, Guindy, Chennai - 600032
Telephone : 044 - 22501529

Name of the CourseDurationQualification
Shoe CAD1 Month8th Pass / Fail with Shoe Design Knowledge
Certificate of Footwear Manufacturing12 Months10th Pass / Fail

3.National Small Industries Corporation Ltd(NSIC),
Sector B-24, Guindy Industrial Estate,
Ekkaduthangal, Chennai - 600032

Name of the CourseDurationQualification
Advanced Embedded System Integrated with Softskills2 MonthsFinal Year / Passed out students of Diploma / Degree in ECE, EEE, IT, E&I, CSE
Advanced Networking Using CISCO Router integrated with softskills2 MonthsFinal Year / Passed Out Student of any degree
CNC Programing & Operation & CAD/CAM using unigraphics softwre3 MonthsFinal Year / Passed out of degree, diploma in Mechanical Engineering / ITI
3D Modeling Design Using Auto CAD integrated with softskills2 MonthsFinal Year / Passed out of degree, diploma in Mechanical Engineering / ITI
PLC, AC Drives & Control Panel Integrated with softskils2 MonthsFinal Year / Passed out of degree, diploma in Mechanical Engineering / ITI
Computer Aided Design Using Unigraphics & Pro-E Software integrated with softskills2 MonthsFinal Year / Passed out of degree, diploma in Mechanical Engineering / ITI

4.National Institute of Fashion Technology,
NIFT Campus, Rajiv Ghandhi Salai, Taramani, Chennai - 600113
Telephone : 044-22542756 / 22542768
Name of the CourseDurationQualification
Certificate Cource in Retailing3 MonthsGratuate in any Discipline
Leather Goods Designing  & Production Technology6 Months+2 Pass
Fashion Retails Managemant6 Months+2 Pass

5.Central Institute of Plastics Engineering & Technology(CIPET), Guindy, Chennai - 600032
Name of the CourseDurationQualification
Plastic Processing Machine Operator(PPMO)6 Months10th Pass / Fail
Injection Moulding Machine Operator(IMO)6 Months10th Pass / Fail
Plastic Processing Technology(PPT)6 MonthsAny Degree

6.National Film Developement Corporation Ltd(NFDC),
1st Floor, Co-Optex Warehouse Building,
350, Pantheon Road, Egmore, Chennai - 600008
Telephone : 044 - 28192506/28192407/28191427
Name of the CourseDurationQualification
Multimedia(Photoshop, Illustrator, Coreldraw & Flash)1 Month10th & above
Digital Still Photography1 Month10th & above
Animation (3D Studio Max)1 Month10th & above

7.Micro Small & Medium Enterprises(MSME Developement Institute)
65/1, GST Road, Guindy, Chennai - 600032
Telephone : 044 - 25501011
Name of the CourseDurationQualification
Advaced Automobile Technology3 Months10th Pass
Air Conditioning & Refrigeration1 Month10th Pass
Electrical Course3 Months10th Pass
Industrial Control Automation2 MonthsITI, Diploma
Software Testing10 DaysDegree / Diploma

இந்த பயிற்ச்சியில் சேருவதற்க்கான தகுதிகள்:

பொற்றோரின் ஆண்டி வருமானம் 1,00,000 மிகாமல் இருக்க வேண்டும்.
பயிற்ச்சிக்கு விண்னப்பிப்பவர்கள் இஸ்லாமிய‌,கிருஸ்த்துவ, புத்த மற்றும் பார்சீய மதத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
சமீபத்தில் எடுக்கப்பட்ட 2 புகைபடங்கள்
சாதி சான்றிதழ்
வருமான சான்றிதழ்
10 ஆம் பகுப்பு மதிப்பென் சான்றிதழ் / பள்ளி இறுதி சான்றிதழ்
பட்ட படிப்பு அல்லது பட்ட மேற்ப்படிப்பு சான்றிதழ் / கல்லூரி இறுதி ஆண்டு படிப்பவர்கள் முந்தைய பருவ தேர்வின் மதிப்பென் சான்றிதழ்
கல்லூரி மாற்று சான்றிதழ்

தகுதிக்கு ஏற்ப்ப பயிற்ச்சியை தேர்ந்தேடுத்து அதற்க்கான சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.

பயிற்ச்சிகான நேர்காணல் நடைபெறும் இடங்கள் மற்றும் நாட்கள்:

மேல் குறிப்பிடபட்டுள்ள 7 நிறுவனங்களிலும் அந்த நிறுவனங்களில் அளிக்கபடும் பயிற்ச்சிகளுக்கான நேர்காணல் நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெறும்.

நேர்காணலின் போது மேல் குறிப்பிடபட்ட ஆவணங்களின் அசலை கொண்டு செல்ல வேண்டும்.

படிப்பை பாதியில் கைவிட்டு அடுத்து வெளி நாடுகளுக்கு போகலாம என்று எண்ணிக் கொண்டு இருக்கும் என் சமுதாய இளைஞர்களே சிந்தியுங்கள் நமக்கான கதவுகள் இந்தியாவில் திறந்து உள்ளன பலவகையான வழிமுறைகளும் பயிற்ச்சிகளும் இந்தியாவிலேயே உள்ளன. இவற்றை எல்லாம் பயன்படுத்தாமல் பெற்றோர் உற்றார் உறவினர்களை பிறிந்து அர்ப்ப ஊதியத்தில் அயல் நாட்டு வேலை தேவை தானா ???

வலிமையான கல்வி அறிவு பெற்ற சமுதாயத்தை உருவாக்க கலமிறங்குங்கள் இன்ஷா அல்லாஹ் வரும் தலைமுறையை வெற்றி தலைமுறையாக மாற்றலாம் !!

Wednesday, October 12, 2011

இறைவேதத்தின் நிரூபணமும்



ஆழ் கடலின் அலையும் இறைவேதத்தின் நிரூபணமும்



கடலின் மேற்ப்பரப்பில் அலைகள் தவழ்வதை அனைவரும் அறிந்துள்ளனர். ஆனால் ஆழ்கடலுக்கு உள்ளேயும் அலைகள் உள்ளன. கடலின் ஆழத்தில் ஏற்ப்படும் பேரலைகள் சுனாமியாகச் சீற்றமடைகிறது.என்ற உண்மையை சுனாமிக்குப் பிறகே மனிதர்கள் பரவலாக அறிந்து கொண்டனர்.


ஆழ்கடலிலும் அலைகள் உள்ளன என்ற பேருண்மையைத் திருக்குர் ஆன் தெளிவாக கூறி இது இறைவனின் வார்த்தை தான் உறுதிப் படுத்துகிறது.


அல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை! அதன் மேலே மேகம்! ஒன்றுக்கு மேல் ஒன்றாக பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதை (கூட) அவனால் பார்க்க முடியாது. திருக்குர் ஆன் 24:40


இவ்வசனத்தில் கடலைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது ஒருவன் கடலுக்குள் மூழ்கும் போது அங்கே அவன் மேல் அலை அடிக்கும் எனவும் கூறுகிறான்.


கடலின் மேற்ப்பரப்பில் அதுவும் கடற்க்கரை ஓரங்களில் மாத்திரமே அலை இருக்கும் என்று கருதப்பட்ட காலத்தில் கடலின் அடியில் அலைக்கு மேல் அலை இருக்கும் என்ற மாபெரும் அறிவியல் உண்மையை இவ்வசனம் கூறுகிறது.


கடலின் ஆழத்தில் கடுமையான அலைகளின் சுழற்ச்சி இருப்பதை சமீபத்தில் தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


கடல் ஆழத்தைபற்றிய அறிவு எதுவும் இல்லாத காலத்தில் வாழ்ந்த நபியால் இதைச் சொந்தமாக கூறியிருக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது.


எனவே திருக்குர் ஆன் அல்லாஹ்வின் வேதம் தான் என்பது இவ்வசனத்தின் மூலம் நிரூபணம் ஆகிறது.


மனிதர்களால் குறையும் பூமி.



அவர்களால் பூமி எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை அறிவோம். நம்மிடம் பாதுகாக்கப்பட்ட ஏடு உள்ளது. திருக்குர் ஆன் 50:4

அல்லாஹ் உங்களை பூமியிலிருந்தே வளர்த்து பெரிதாக்கினான்.
திருக்குர் ஆன் 71:17

உலகில் வாழும் மனிதர்களால் பூமி குறைகிறது என்ற தத்துவம் இவ்வசனங்களில் சொள்ளப்பட்டிருக்கிரத். அதில் மிகப்பெரிய உண்மை அடங்கியிருக்கிறது.

பூமியில் எவ்வளவு உயிரினங்கள் உருவானாளுமதற்குரிய எடை வெளியிலிருந்து கிடைப்பதில்லை. பூமியுடைய எடை குறைந்து தான் அது மனிதனாக, மிருகங்களாக,மரங்களாக மற்ற உயிரினங்களாக உற்பத்தியாகின்றன.

இப்படியே முளைக்கின்ற, வளருகின்ற எல்லாப் பொருளுமே தங்களின் எடையை பூமியிலிருந்து தான் எடுத்துக் கொள்கின்றன.

எத்தனை கோடி மக்கள் பெருகினாலும் அதனால் பூமியுடைய எடை கூடாது. இந்த மக்களோடு சேர்த்து பூமியை எடை போட்டால் ஆரம்பத்தில் பூமியை படைத்த போது இருந்த அதே எடை தான் இருக்கும்.

மனிதன் பூமியிலிருந்து தான் தனது எடையை எடுத்துக் கொண்டு வளருகிறான் என்ற அறிவியல் உண்மையை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னாள் கூறியிருப்பதன் மூலம் இது இறைவனின் வேதம் தான் என்பது நிரூபணம் ஆகிறது.

இதே தத்துவத்தை மற்றொரு கோணத்திலும் திருக்குர் ஆன் பின் வரும் வசனத்திலும் கூறுகிறது.

அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். (உங்களுக்கு) தங்குமிடமும் ஒப்படைக்கப்படும் இடமும் உள்ளன. புரிந்து கொள்ளும் சமுதாயத்திற்கு சான்றுகளை விளக்கியுள்ளோம். திருக்குர் ஆன் 6:98

இவ்வசனத்தில் கூறப்படும் தங்குமிடம் என்பது இந்த உலகத்தில் வாழுகின்ற பூமியைக் குறிக்கும் என்பதையும், ஒப்படைக்கப்படும் இடம் என்பது மனிதன் மண்ணுக்குள் அடக்கம் செய்யப்படக் கூடிய இடத்தைக் குறிக்கும் என்பதையும் சாதாரணமாக யாரும் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் திருக்குர் ஆன் பயன் படுத்தியிருக்கின்ற "ஒப்படைக்கப்படும் இடம்" என்ற வார்த்தை மிகப் பெரிய உண்மையை சொல்கிறது.

மனிதன் இந்த உலகில் சின்னஞ்சிறிய அளவில் பிறப்பெடுக்கின்றான். அவன் பிறப்பெடுத்த போது இருந்த அளவை விட பல மடங்கு பெரிதாக வளர்ந்து பின்னர் மரணிக்கின்றான். அவன் பிறந்த போது இருந்த இருந்த அந்த எடை பல மடங்கு பெரிதாக எப்படி ஆனது என்றால் இந்த மன்னில்லிருந்த சத்துக்களை அவன் பெறுவதால் தான் ஆனது.

மண்ணிலிருந்து உற்பத்தியாகின்ற தானியங்கள். பருப்புகள் இன்ன பிற சத்துக்களை பெற்று தன்னை பெரித்தக்கி கொண்டு பூமியின் எடையை மனிதன் குறைத்தான்.

50 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் வாழ்கிறான் என்றால் இவன் வாழ்வதனால் மண்ணிலிருந்து 50 கிலோ எடை குறைந்து விட்டது என்பது பொருள். எங்கிருந்து இந்த ஐம்பது கிலோ எடையை பெறுகிறானோ அதனை அங்கே அவன் ஒப்படைக்க வேண்டும்.

ஒப்படைக்கப்படும் இடம் என்று சொன்னால் இவன் பூமிக்கு உடமையான ஒரு பொருளாக இருக்கிறான். ஏனெனில் அங்கிருந்து தான் இவன் எடுக்கப்பட்டிருக்கின்றான் என்பது கருத்து.

மனிதன் பூமியிலுள்ள மண்ணை நேரடியாக சாப்பிடுவதில்லை மண் வேறு பொருளாக மாறி அதனை மனிதன் சாப்பிட்டு தன உடலை வளர்த்துக் கொண்டான் என்ற தத்துவத்தை உள்ளடக்கி "ஒப்படைக்கப்படுகின்ற இடம்" என்ற சொல்லை அல்லாஹ் மிகப் பொருத்தமாகப் பயன் படுத்தியிருக்கின்றான்.



உதிக்கும் பல திசைகள்



சாதாரணமாக திசைகளைப்
பற்றி பேசும் போது கிழக்கு

மேற்கு என்று ஒருமையில் தான்

குறிப்பிடுவர். ஆனால் திருக்குர்ஆன்

இரண்டு

கிழக்குகள் இரண்டு மேற்குகள்

எனவும் பல கிழக்குகள் பல

மேற்குகள் எனவும்

பயன்படுத்தியுள்ளது.


(அவன்) வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கு இறைவன். கிழக்குகளுக்கும் இறைவன். திருக்குர்ஆன் 37:5
(அவன்) இரண்டு கிழக்கு திசைகளுக்கும் இறைவன். இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவன். திருக்குர்ஆன் (55:17)
கிழக்குகளுக்கும் மேற்க்குகளுக்குமுரிய இறைவன் மேல் ஆணையிடுகிறேன். அவர்களை விடச் சிறந்தோரைப் பகரமாக்கிட நாம் ஆற்றலுடையவர்கள். நாம் தோற்ப்போர் அல்லர். திருக்குர்ஆன் (70:40)
இரண்டு கிழக்குகள்
இரண்டு மேற்குகள்' என்ற

சொற்றொடரும் 'பல கிழக்குகள் பல

மேற்குகள்' என்ற சொற்றொடரும் இந்தப்
பூமி
உருண்டை என்பதற்குத் தெளிவான

சான்றாக அமைந்துள்ளது.


பூமி தட்டையாக
இருந்தால் சூரியன் ஒரு இடத்தில்

உதித்து மறு இடத்தில்

மறைந்து விடும்.

சூரியன் உதிக்கும் திசையைக்

கிழக்கு என்போம். மறையும்

திசையை மேற்கு

என்போம்.

பூமி உருண்டையாக
இருந்தால் நமக்கு எந்தத் திசையில்

சூரியன்

மறைகிறதோ அதே திசையில் சூரியன்

உதிப்பதை பூமியின் மறு பக்கத்தில்

உள்ளவர் காண்பார், அதாவது நமக்குக்

கிழக்காக இருப்பது மறு பக்கம்

உள்ளவருக்கு மேற்காக அமைகின்றது.

நமக்கு மேற்காக இருப்பது மறு பக்கம்

உள்ளவருக்கு கிழக்காக அமைகின்றது.

இரண்டு கிழக்குகள்
,இரண்டு மேற்குகள்
என்பது எவ்வளவு பொருள்

பதிந்தது என்பதை நாம் சிந்திக்க

வேண்டும்.

பூமி உருண்டையாக இருந்தால்
பூமியுடைய ஒவ்வொரு புள்ளியிலும்

உதிக்கும் பல

திசைகள் உருவாகின்றன; மறையும்

திசைகளும் இவ்வாறே இருக்கின்றன.

பல உதிக்கும் திசைகள், பல மறையும்
திசைகள் என்ற சொல் மூலம்

பூமி உருண்டை

வடிவிலானது என்ற அறிவியல்

உண்மையை உள்ளடக்கி ஒரு மாபெரும்

விஞ்ஞானி

பேசுவது போல் திருக்குர்ஆன்

பேசுகிறது. இதுவும் திருக்குர்ஆன்

இறை வேதம்

என்பதற்குச் சான்றாகும்.


 


இரு கடல்களுக்கிடையே தடுப்பு

இரு கடல்களுக்கிடையே தடுப்பு
திருக்குர்ஆன் பல இடங்களில் இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் அவ்விரண்டுக்கும் இடையே ஒரு பலமான தடையையும், தடுப்பையும் ஏற்படுத்தியுருப்பதாகக் கூறுகிறது.

(நீங்கள் இணை கற்ப்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும்இரண்டு கடல்களுக்கு இடையே தடுப்பையும் ஏற்ப்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை. (திருக்குர்ஆன் 27:61)

இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்ப்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது.(திருக்குர்ஆன் 55:19,20)

கடல் பற்றி ஆய்வு செய்பவர்கள் ஆராய்ச்சி செய்து இரு கடல்கள் சங்கமமாகும் இடங்களில் இரண்டு தண்ணீரும் சுவையிலும், அடர்த்தியிலும், உப்பின் அளவிலும் வேறுபட்டிருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த கடல் இயல் ஆய்வாளர் ஜேக்கூஸ் கோஸ்டோ என்பவர் ஆராய்ந்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பு இருப்பதை முதலில் கண்டறிந்தார்.


இது எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் எப்படித் தெரியும்?

எனவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் சான்றாக இருக்கிறது.



நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது?

நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது?
வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம். அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள். (திருக்குர்ஆண் 23 :18 )
பூமியின் மேற்ப்பரப்பில் தண்ணீர் இருப்பது போல் பூமியின் கீழ்ப் பரப்பிலும் பெரிய ஆறுகளும், ஏராளமான தண்ணீரும் உள்ளன.

இந்த நிலத்தடி நீர் கடல் வழியாக பூமிக்கு வருவதாகத் தான் முதலில் நம்பினார்கள். உண்மையில் ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை ஆங்காங்கே பூமியால் உறிஞ்சப்பட்டு அந்த நீர் தான் பூமிக்கு அடியில் நிலத்தடி நீராக சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்று கி.பி 1580 தான் கண்டறிந்தனர்.

சமீப காலத்தில் தான் மழை நீரை நிலத்தடியில் சேமிப்பதற்கான பலவிதமான நடவடிக்கைகளையும் அரசுகள் எடுத்து வருகின்றன.

இந்தப் பேருண்மைகளை திருக்குர்ஆன் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவுபடுத்தி விட்டது.

பெய்கின்ற மழை நீரை உறிஞ்சுவதற்கு ஏற்ப ஊர்களையும், நகரங்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற மறைமுகமான வழி காட்டுதலும் இந்த வசனத்திற்குள் அடங்கியிருக்கிறது.
 



பூமியைத் தொட்டிலாக



பூமியைத் தொட்டிலாக
திருக்குர்ஆன் பல இடங்களில் பூமியைத் தொட்டிலாக ஆக்கியிருப்பதாகக்
குறிப்பிடுகிறது.
அவனே பூமியை உங்களுக்குத்ப் தொட்டிலாக அமைத்தான். (திருக்குர்ஆன் 20:53)

அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான்நீங்கள் வழிகளை அடைவதற்காக அதில் பல பாதைகளை அமைத்தான். (திருக்குர்ஆன் 43:10)

பூமியைத் தொட்டிலாகவும், மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா? (திருக்குர்ஆன் 78:67)

பூமி சூரியனால் ஈர்க்கப்பட்டு சூரியனை விட்டு விலகாமல் ரங்கா ராட்டினம் சுழல்வது போல் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனுடன் ஒரு கயிற்றால் கட்டி இழுக்கப்படுவது போன்ற நிலையில் இந்தப் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது.

வினாடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் சூரியனை ஒரு ரங்கா ராட்டினம் போல் சுற்றி வந்தாலும் அதை நம்மால் உணர முடிவதில்லை. அது சுற்றுவது நமக்கு தெரிவதும் இல்லை.

குழந்தைகளைத் தொட்டிலில் இட்டு ஆட்டும் பொது அதன் சுழற்சி குழந்தைகளுக்குத் தெரியாது. அது அவர்களுக்கு சுகமாகவும், நித்திரை தரக்கூடியதாகவும் இருக்கும்.

பூமி வேகமாக சுழன்றாலும் அந்தச் சுழற்சி நமக்குத் தெரியாது. எந்த விதமான பாதிப்பும் நமக்கு இருக்காது. தொட்டிலாக என்ற சொல் மூலம் இதைத்தான் அல்ல்லாஹ் குறிப்பிடுகிறான்.


ஓரங்களில் குறையும் பூமி



ஓரங்களில் குறையும் பூமி
நிலபரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலபரப்பு கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது.

ஓரங்களில் சிறிது சிறிதாக நிலபரப்பு குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குரானில் கூறப்பட்டுள்ளது.

பூமியை அதன் ஓரங்களில் நாம் குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான் அவனது தீர்ப்பை ஒத்திவைப்பவர் எவரும் இல்லை. அவவன் விரைந்து விசாரிப்பவன். (திருக்குர்ஆன் 13 :4 )

அவர்களுக்கு ஆயுளை அதிகமாக்கி அவர்களுக்கும் அவர்களின் முன்னோர்களுக்கும் வாழ்க்கை வசதியைக் கொடுத்தோம் "பூமியை அதன் ஓரப்பகுதிகளில் குறைத்து வருகிறோம்" என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அவர்களா (நம்மை) வெல்பவர்கள்? (திருக்குர்ஆன் 21 : 44 )

திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தையே என்பதற்கு இவ்வசனங்கள் தெளிவான சான்றாக அமைந்திருக்கிறது.

நிலபரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலபரப்பு கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது.

ஓரங்களில் சிறிது சிறிதாக நிலபரப்பு குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குரானில் கூறப்பட்டுள்ளது.

பூமியை அதன் ஓரங்களில் நாம் குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான் அவனது தீர்ப்பை ஒத்திவைப்பவர் எவரும் இல்லை. அவவன் விரைந்து விசாரிப்பவன். (திருக்குர்ஆன் 13 :4 )

அவர்களுக்கு ஆயுளை அதிகமாக்கி அவர்களுக்கும் அவர்களின் முன்னோர்களுக்கும் வாழ்க்கை வசதியைக் கொடுத்தோம் "பூமியை அதன் ஓரப்பகுதிகளில் குறைத்து வருகிறோம்" என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அவர்களா (நம்மை) வெல்பவர்கள்? (திருக்குர்ஆன் 21 : 44 )

திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தையே என்பதற்கு இவ்வசனங்கள் தெளிவான சான்றாக அமைந்திருக்கிறது.



முளைகளாக மலைகள்

பூமியில் அமைக்கப்பட்டுள்ள மலைகளைப் பற்றி அல்லாஹ் கூறும் பொது அதை முளைகளாக நாடியிருக்கிறோம் என்று கூறுகிறான்.
மலைகளை முளைகளாக நாட்டினான். திருக்குர்ஆன் (79 :31 )

பூமியை தொட்டிலாகவும், மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா? (திருக்குர்ஆன் 78 :6,7 )

அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம், இனிமையான நீரையும் உங்களுக்கு புகட்டினோம் .. திருக்குர்ஆன் (77 :27 )

பூமியை விரித்தோம் , அதில் முளைகளை நாட்டினோம் , அதில் எடை வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் முளைக்கச் செய்தோம் . திருக்குர்ஆன் (15 :19 )
பூமி உங்களை அசைத்து விடாதிருக்க அதில் முளைகளையும் , நீங்கள் வழியரிவதர்க்காக பல பாதைகளையும் , நதிகளையும் , பல அடையாளங்களையும் அவன் அமைத்தான் . நட்சத்திரத்தின் மூலம் அவர்கள் வழியை அறிந்து கொள்கின்றனர் . திருக்குர்ஆன் (16 :15,16)

பூமி அவர்களைச் சாய்த்து விடாதிருப்பதர்க்காக முளைகளை ஏற்ப்படுத்தினோம். அவர்கள் வழி காண்பதற்காக பல நீண்ட பாதைகளையும் அதில் ஏற்ப்படுத்தினோம். (திருக்குர்ஆன் 21:31)

(நீங்கள் இணை கற்ப்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி , அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கு இடையே தடுப்பையும் ஏற்ப்படுத்தியவனா ? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா ? இல்லை ! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை . (திருக்குர்ஆன் 27:61)

நீங்கள் பார்க்கக்கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான். உங்களைச் சாய்ந்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான். அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச் செய்தான். (திருக்குர்ஆன் 31 :10 )

அதன் மேலே முளைகளை ஏற்ப்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். நான்கு நாட்களில் அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே. (திருக்குர்ஆன் 41:10 )

ஒரு பொருள் இன்னொரு பொருளை விட்டும் பிரிந்து விடாதிருப்பதர்க்காக அறியப்படுவதே முளைகலாகும்.

இந்தப் பூமி பல்வேறு அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ள்ளது. மேல் அடுக்குகள் எடை குறைந்தவையாகவும், உள் அடுக்குகள் கனத்த எடை உடையவையாகவும் உள்ளன.

வேகமாக பூமி சுழலும்போது உள்ளடுக்கில் உள்ள கனமான பொருட்களும், மேலடுக்கில் உள்ள எடை குறைவாக உள்ள பொருட்களும் ஒரே வேகத்தில் சுற்ற இயலாது.

இந்த நிலை ஏற்ப்பட்டால் மேல் அடுக்கில் உள்ள மனிதர்கள் தூக்கி எறியப்படுவார்கள். கட்டடங்களெல்லாம் நொறுங்கி விடும்.

இதைத் தடுக்க வேண்டுமானால் கனமான அடுக்குகளையும், கணம் குறைந்த அடுக்குகளையும் இணைக்கும் விதமாக முலைகள் நட்டப்பட வேண்டும். அதைத் தான் மலைகள் செய்கின்றன.

ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள மலைகள் காரணமாக மேல் அடுக்குகளும், கீழ் அடுக்குகளும் ஒன்றையொன்று பிரிந்து விடாத வகையில் சுழல முடிகிறது.

இந்த மாபெரும் அறிவியல் உண்மை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டிருப்பது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு மற்றொரு சான்றாகும்.

பூமி முதலில் உருவாகி பிறகுதான் மலைகள் உருவாகின என்றும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதற்க்கு மலைகள் முளைகளாக நாட்டப்பட்டுள்ளன என்ற வசனங்கள் எதிரானவை என்று கருதக் கூடாது.

முதல் இரண்டு நாட்களில் பூமியை படைத்ததாகவும், பிறகு இரண்டு நாட்களில் பூமியில் மலைகளை நிறுவி அதிலுள்ள உணவு உற்பத்திக்கான ஏற்ப்பாடுகள் செய்ததாகவும் திருக்குர்ஆன் 41 :10 வசனம் கூறுவதைக் கவனிக்கவும்.




புவி ஈர்ப்பு சக்தி


புவி ஈர்ப்பு சக்தி

வானத்துக்கும் பூமிக்கும் இடையே எந்த தூண்களும் இல்லை. என்பதை நாம் காண்கிறோம். வானத்தைப் பற்றிப் பேசும் பொது தூங்களில்லாத வானம் என்று தான் அனைவரும் குறிப்பிட்டு வருகிறோம். ஆனால் திருக்குர்ஆன் வழக்கத்துக்கு மாற்றமான வர்ணனையுடன் வானத்தைப் பற்றி பேசுகிறது.

நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். (திருக்குர்ஆன் 13 :2 )

நீங்கள் பார்க்கக் கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான். (திருக்குர்ஆன் 31:10 )

நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களைப் படைத்தான் எனக் கூறப்படுகிறது. "வானங்களுக்கும்,பூமிக்கும் தூண்கள் உள்ளன. ஆனால் அவைகளைப் பார்க்க முடியாது." என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

பார்க்க முடியாத தூண்கள் இருக்கின்றனவா? என்றால் நிச்சயமாக இருக்கின்றன. உலகத்தில் இருக்கின்ற பூமி உள்ளிட்ட எல்லாக் கோள்களும் அவற்றிற்குரிய இடங்களில் நீந்துவதற்கு அவற்றைக் குறிப்பிட்ட வேகத்துடன் இழுத்துப் பிடிக்கின்ற ஒரு ஈர்ப்பு விசை எல்லாப் பகுதியிலும் பரவியிருப்பது தான் காரணம்.

இந்த ஈர்ப்பு விசையின் காரணமாகத் தான் ஒவ்வொரு கோள்களும் அந்தரத்தில் எவ்வித பிடிமானமும் இன்றி தொங்குகின்ற காட்சியை பார்க்கின்றோம்.

எனவே சில நூற்றாண்டுகளுக்கு முன் மனிதன் கண்டறிந்த ஈர்ப்பு விசை எனும் கண்டுபிடிப்பை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறுகிறது.

வானத்திற்கும்,பூமிக்கும் எந்தத் தூண்களும் இல்லை என்று தெளிவாகத் தெரியும் போது முஹம்மது நபியவர்கள் "பார்க்கின்ற தூண்களின்றி" என்ற வார்த்தையைத் தேவையில்லாமல் பயன்படுத்தி இருக்க முடியாது.
வானங்களையும் பூமியையும் படைத்தவன் பேசுகின்ற வார்த்தையாக இருப்பதால் தான் "பார்க்கின்ற தூண்களின்றி" என்ற சொல்லைப் பயன்படுத்தி நம்மால் பார்க்க முடியாத தூண்கள் இருக்கின்றன என்ற உண்மையை இறைவன் மறைமுகமாக குறிப்பிடுகின்றான்.

திருக்குர்ஆன் முஹம்மது நபியின் கற்பனையல்ல; ஏக இறைவனின் கூற்றுத் தான் என்பதற்கு மற்றுமொரு சான்றாக இது அமைந்துள்ளது.

பூமிக்கும் வானத்துக்கும் இடையே ஈர்ப்பு விசை இயங்குகிறது என்பதை வேறு வார்த்தைகள் மூலம் மற்றொரு வசனத்திலும் இறைவன் தெளிவுப்படுத்துகிறான்.

வானவ்களும்,பூமியும் இடம் பெயராதபடி அவனே தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அவனன்றி எவரும் எவரும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. அவன் சகிப்புத் தன்மையுடையவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.(திருக்குர்ஆன் 35:41)

வானங்களும் பூமியும் விலகி விடாமல் இருக்குமாறு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

வானங்களும் பூமியும் ஒன்றோடு ஒன்று ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒன்றின் ஈர்ப்பு விசை அதிகரித்தாலோ,குறைந்தாலோ அவை சிதறிச் சின்னாபின்னமாகி விடும் என்ற கருத்து இதனுள் அடங்கியிருப்பதை யாரும் அறியலாம்.

புவி ஈர்ப்பு விசை பற்றி மற்றொரு கோணத்திலும் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.
ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ்வைத்த் தவிர யாரும் அவற்றை (அந்தரத்தில்) நிறுத்தவில்லை. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.(திருக்குர்ஆன் 16 :79 )

வானங்களிலும்,பூமியிலும் உள்ளையும், அணிவகுத்த நிலையில் பறவைகளும் அல்லாஹ்வைத் துதிப்பதை நீர் அறிய வில்லையா? ஒவ்வொன்றும் தனது வணக்கத்தையும், துதித்தளையும் அறிந்துள்ளன. அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.(திருக்குர்ஆன் 24:41 )

அவர்களுக்கு மேலே பறவைகள் (சிறகுகளை) விரித்தும், மடக்கியும், இருப்பதை அவர்கள் கனவில்லையா? அளவற்ற அருளாலனைத் தவிர வேறு எதுவும் அவற்றைக் கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்.(திருக்குர்ஆன் 67:19 )

பறவைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது "அவை ஆகாயத்தில் வசப்படுத்தப்பட்டுள்ளன." உமது இறைவன் தான் அதை வசப்படுத்தி இருக்கிறான்" என்று இறைவன் கூறுகிறான்.

இதில் மிகப் பெரிய அறிவியல் உண்மை உள்ளடங்கி இருக்கிறது. பூமி தன்னைத் தானே சுற்றுவதை நாம் அறிவோம். தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனையும் இந்தப் பூமி ஒரு வருடத்தில் வட்டமடித்து முடிக்கிறது. சூரியனைச் சுற்றுவதற்காக அது செல்கின்ற வேகம் வினாடிக்கு 250 கிலோ மீட்டர் தூரம்.

வினாடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் பூமி வேகமாக நகரும் போது பூமி நகர்கின்ற திசையில் இருக்கின்ற அந்தப் பறவைகள் மீது மோத வேண்டும்.

பூமியின் ஈர்ப்பு சக்தி ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை இருப்பதால் பூமி அந்தப் பறவையைச் சேர்த்து இழுத்துக்கொண்டே போகிறது. முன் பக்கம் இருக்கும் பறவையை தள்ளிக் கொண்டும் பின் பக்கம் இருக்கின்ற பறவையை இழுத்துக்கொண்டும் பூமி நகர்கிறது. முன் பக்கம் பறக்கின்ற பறவையை தள்ளாமல் இந்த பூமி வேகமாகச் சென்றால் எந்தப் பறவையும் பறக்க முடியாது. பூமியில் மோதி செத்து விடும்.

இந்தப் பேருண்மையைத் திருக்குர்ஆன் அற்ப்புதமான சொற்களால் குறிப்பிடுகிறது. இதுவும் திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு மறுக்க முடியாத சான்றாகும்.




பூமியில் தான் வாழ முடியும்.

பூமியில் தான் வாழ முடியும்.

நாம் வாழ்கின்ற பூமியைப் போலவே இன்னும் பல கோள்கள் இருப்பதையும், பூமியைப் போலவே அவை சுற்றிச் சுழல்வதையும் திருக்குர்ஆன் கூறுகிறது.விண்வெளிப்பயணம் கூட சாத்தியம் எனக்கூறும் திருக்குர்ஆன் ஆனால் பூமியில் மட்டும்தான் மனிதன் வாழ முடியும் எனவும் வேறு எந்தக் கிரகத்திலும் வாழ முடியாது என்பதை அழுத்தமாக எடுத்துரைக்கிறது.

"உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும்,வசதியும் உள்ளன." என்றும் கூறினோம்.(திருக்குர்ஆன் : 2 :36)

"உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும் வசதியும் உள்ளன."என்று (இறைவன்) கூறினான். .(திருக்குர்ஆன் : 7:24)

"அதிலேயே வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள்" என்றும் கூறினான்..(திருக்குர்ஆன் : 7:25)

பூமியில் உங்களை வாழசெய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் இதில் ஏற்ப்படுத்தினோம்...(திருக்குர்ஆன் : 7:10)

அவனது கட்டளைப்படி வானமும், பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. பின்னர் அவன் உங்களை ஒரே தடவை அழைப்பான். அப்போது பூமியிலிருந்து வெளிப்படுவீர்கள். ..(திருக்குர்ஆன் : 30 :25)

"பூமியிலிருந்து மீண்டும் எழுப்பப்படுவீர்கள்" என்ற சொற்றொடர் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒற்றோடராகும். எல்லா மனிதர்களும் அழிக்கப்பட்ட பின் அனைவரும் பூமியிலிருந்து எழுப்பபடுவார்கள்" என்பது ஒரு மனிதன் கூட பூமிக்கும் வெளியே வாழ முடியாது என்பதைத் தெளிவுப் படுத்துகிறது.

"இதில் தான் வாழ்வீர்கள்" என்ற சொற்றொடர் பூமியைத் தவிர வேறு எங்கும் மனிதர்கள் இயற்கையாக வாழ முடியாது." என்பதை எடுத்துரைக்கிறது. சில கோள்களில் உயிரினம் வாழ்ந்த தடயம் தென்படுகிறது என்றெல்லாம் கூறினாலும் அது நிரூபிக்கப்படவில்லை. மனிதன் பூமியில் மட்டும் தான் வாழ முடியும் என்பதை விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்கிறார்கள்.

மனிதன் தாங்கிக்கொள்கின்ற அளவுக்கு வெப்பமும், குளிரும் பூமியில் மட்டுமே உள்ளது.

சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்துவிடும்.

உயிர் வாழ அவசியமான காற்றும் பூமியில் தான் இருக்கிறது. ஆக்ஸிஜன் துணையுடன் சில நாட்கள் விண்வெளியில், அல்லது சந்திரனில் தங்குவதை வாழ்வது என்று கூறக்கூடாது. அது இயற்க்கைக்கு மாற்றமானது.

அதை விட முக்கியமாக கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாகச் சுழல்கிறது. இப்படிச் சாய்வாக சுழல்வதால் தான் கோடை,குளிர்,வசந்தம்,மற்றும் இலையுதிர்க்காலம் ஏற்ப்படுகின்றன.

வருடமெல்லாம் ஒரே சீரான வெப்பமோ,குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது.எழுத படிக்கத்தெரியாத முஹம்மது நபிக்கு "இதில் தான் வாழ்வீர்கள்" என்று எவ்வாறு அடித்துக்கூற இயலும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இதுவும் இறை வேதம் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது. 



வானத்தை முகடு என ஏன் திருக்குர்ஆன் கூறுகிறது?

வானத்தை "பாதுகாக்கப்பட்ட முகடு" என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் குறிப்பிடுகிறது.

அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான்.எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்ப்பனை செய்யாதீர்கள்! (திருக்குர்ஆன் 2 :22 )

வானத்தை பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம். அவர்களோ அதில் உள்ள சான்றுகளை புறக்கணிக்கின்றனர்.(திருக்குர்ஆன் 21:32 )

அல்லாஹ்வே இப்பூமியை உங்களுக்கு நிலையானதாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான்..(திருக்குர்ஆன் 40:64 )

உயர்த்தப்பட்ட முகட்டின் மேல் சத்தியமாக!..(திருக்குர்ஆன் 52:5 )

வானத்தை முகடு என ஏன் திருக்குர்ஆன் கூறுகிறது?

விண்ணிலிருந்து வருகின்ற புற ஊதாக் கதிர்கள் வானத்தில் வடிகட்டப் படுகின்றன. அங்கிருந்து வருகின்ற ஏறி கற்களின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு எரிக்கப்பட்டு கேடு விளைவிக்காத அளவில் கீழே விழுகின்றன.

மேலே இருக்கின்ற முகடு சூரியனின் அளவு கடந்த வெப்பத்தையும் குறைக்கிறது. இது மாதிரியான பாதுகாப்புகளைச் செய்வதால் வானத்தை முகடு என்று திருக்குர்ஆன் கூறுகிறது.இதுவும் மாபெரும் அறிவியல் உண்மையாகும் . 



விண்வெளிப் பயணம் சாத்தியமே.குரானின் முன் அறிவிப்பு.

விண்வெளிப் பயணம் சாத்தியமே.

மனிதன் இன்று விண்வெளியில் பயணம் செய்வதற்கேற்ற சாதனங்களை உரிவாக்கி அதன் வழியாக சந்திரனுக்குச் சென்று வந்து விட்டான். செவ்வாய் கிரகத்துக்கும், இன்ன பிற கோள்களுக்கும் செல்லும் முயற்சியில் தீவிரமாக இர்நகியுல்ளான்.

நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் விண்வெளிப் பயணம் பற்றி அறிந்திருக்கவில்லை. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் நிலையைச் சொல்லத் தேவையில்லை.

பூமி உருண்டை வடிவிலானது என்பதையோ, பூமி சுழல்வதையோ, அது சூரியனை சுற்றிக் கொண்டு இருப்பதையோ, மற்ற கோள்களும் சுற்றி சுழல்கின்றன என்பதையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை.
இத்தகைய காலகட்டத்தில் வாழ்ந்த எழுத படிக்கத் தெரியாத ஒருவர் வின் வெளிக்குச் செல்வது பற்றியோ, செல்வதற்கு சரியான வழி பற்றியோ, செல்பவருக்கு ஏற்ப்படும் அனுபவம் பற்றியோ பேச முடியுமா? 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் இவை அனைத்தையும் தெளிவான வார்த்தைகளால் கூறியிருக்கிறது.

மனித ஜின் கூட்டமே வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.
(திருக்குர்ஆன்-55 :33 )

விண்ணுலகம் வரை மனிதன் பயணம் மேற்கொள்ளலாம்: மேற்கொள்ள முடியும் என்று இவ்வசனம் தெளிவாக சொல்கிறது. அதே நேரத்தில் அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதற்கான வழிகளையும் சொல்கிறது.

ஒரு ஆற்றலை உருவாக்கிக் கொள்வதன் மூலமாகவே தவிர நீங்கள் இந்த எல்லைகளையெல்லாம் கடக்க இயலாது என்று கூறுகிறது.

விண்ணில் பறக்க முடியுமா? என்பதை கற்பனை செய்து கூட பார்த்ர்ஹதிராத அந்தச் சமுதாயத்தில் விண்ணில் பறக்க முடியும் என்பதையும், அதெற்கென ஒரு ஆற்றல் தேவை என்பதையும் கூறி, இறை வேதம் தான் என்று திருக்குர்ஆன் தன்னை தானே நிரூபித்துக் கொள்கிறது.

விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் இறுக்கமான நிலையை அடைவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான். விமானங்களில் பயணம் செய்பவர்கள் கூட இந்த அனுபவத்தை உணர முடியும்.
விண்வெளிப் பயணம் செய்பவனின் இதயம் நெருக்கடியைச் சந்திக்கும் என்பதையும் திருக்குர்ஆன் கூறியிருக்கிறது.

ஒருவனுக்கு நேர் வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாகி விடுகிறான். இவாறே நம்பிக்கை கொள்ளாதோருக்கு வேதனையை அல்லாஹ் வழங்குகிறான். (திருக்குர்ஆன்-6:125)இந்த அறிவு 1400 வருடங்களுக்கு முன்னர் எவருக்கும் இருந்ததில்லை.விர்ரென்று மனிதன் மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்.

இத்தகைய கால கட்டத்தில் விண்வெளிப் பயணம் மேற்க்கொல்பவனின் இதயம் இறுக்கமான நிலையை அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடியும்? அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும்.

மேலும் மற்றொரு கோணத்திலும் விண்வெளிப் பயணம் சாத்தியம் என்பதை வேறு வார்த்தைகளில் பின்வருமாறு இறைவன் குறிப்பிடுகிறான்.

பாதைகளையுடைய வானத்தின் மீது சத்தியமாக! (திருக்குர்ஆன் 51:17 )


பூமியில் மாத்திரமே பாதைகள் உண்டு என்று மனிதன் நம்பி வந்த காலத்தில் வானத்திலும் ஏராளமான பாதைகள் உள்ளன எனக் கூறி விண்வெளிப் பயணத்தின் சாத்தியத்தை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் கூறியிருப்பது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு மற்றொரு சான்றாகும்.



திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக!


திருப்பித் தரும் வானம்!திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக! பிளக்கும் பூமியின் மீது சத்தியமாக! இது தெளிவான கூற்றாகும். இது கேலிக்குரியதல்ல.
(திருக்குர்ஆண்:86:11,12,13,14)


திருக்குர்ஆண் முகம்மது நபியின் கற்ப்பனை அல்ல. மாறாக தன்னுடைய கூற்றாகும் என்பதை இறைவன் சத்தியம் செய்து கூறும்போது திருப்பித் தரும் வானம் என்ற அற்ப்புதமான அடைமொழியை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.

வானம் எதைத் திருப்பி தருகிறதென்றால் ஏராளாமான விசயங்களை திருப்பித் தந்து கொண்டே இருக்கிறது.

கடலிலிருந்தும்,நீர் நிலைகக்ளிலிருந்தும் உருஞ்சுகின்ற தண்ணீரை மேலே எடுத்துச் சென்று மழையாக திருப்பித் தருகிறது.

இங்கிருந்து அனுப்புகின்ற ஒலி அலைகளை வானம் நமக்கே திருப்பி அனுப்புகிறது. திருப்பித் தருகின்ற தன்மையை வானம் பெற்றுருகின்ற காரணத்தினால் தான் இன்றைக்கு நாம் ரேடியோ போன்ற போன்ற வசதிகளை அனுபவிக்க முடிகிறது.

மேல் நோக்கி அனுப்பப்படும் செய்திகள் ஒரு இடத்தில் தடுக்கப்பட்டு துருமபவும் கீழ் நோக்கி நமக்கே அனுப்பப்படுகின்றன.

இன்றைக்கும் செயற்கைக் கொள் மூலம் ஓளி பரப்பப்படும் காட்சிகள் நமக்கு இங்கே வந்து சேருகின்றன. இங்கேயிருந்து நாம் ஓளி பரப்ப நினைப்பதை வானத்திற்கு அனுப்பினால் வானம் உடனே நமக்கு அனுப்புகிறது.

மேலே இருந்து திருப்பித் தருகின்ற அம்சத்தோடு வானத்தை இறைவன் படைத்திருக்கின்றான்.

இன்னும் நாம் சிந்திக்கும் பொது ஏராளமான விசயங்களை வானம் நமக்குத் திருப்பித் தருவதை அறியலாம்.

திருப்பித் தரும் வானம் என்று யாராவது வானத்திற்கு அடைமொழி சொல்வார்களா? அதுவும் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னாள் சொல்வார்களா?

இந்த மாபெரும் அறிவியல் உண்மையை எழுதப் படிக்கத் தெரியாத முகம்மது சொல்கிறார் என்றால் நிச்சயமாக இது அவருடைய வார்த்தையாக இருக்க முடியாது, படைத்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும்.



திருக்குர்ஆண் கூறும் பெருவெடிப்புக் கொள்கை (big bang theory)

திருக்குர்ஆண் கூறும் பெருவெடிப்புக் கொள்கை (big bang theory)

வானங்களும்,பூமியும் இணைந்திருந்தன என்பதையும்,அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும்,உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (திருக்குர்ஆண் 21:30)

இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றி பலவிதமான கட்டுக் கதைகளைத் தான் முந்தைய நூல்கள் கூறுகின்றன.

திருக்குர்ஆண் மட்டும் தான் இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை 1400 ஆண்டுகளுஉக்கு முன்பே கூறியது. வானம் பூமி எல்லாம் ஒரே பொருளாக இருந்தன. அவற்றை நாம்தான் பிரித்து பிளந்து எடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இதைத்தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது. இந்தப் பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆண் இருந்தால் மட்டுமே இதை கூற முடியும்.

இவ்வாறு பிளக்கப்பட்ட பின் முதலில் தூசுப் படலம் உருவானது. பின்னர் அந்த தூசுப் படலங்கள் ஆங்காங்கே திரண்டு கோள்கள் உருவாயின என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதையும் திருக்குர்ஆண் தெளிவாக கூறுகின்றது.

பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். "விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பாட்டு நடக்க வேண்டும்" என்று அதற்கும்,பூமிக்கும் கூறினான். "விரும்பியே கட்டுப்பட்டோம் என அவை கூறின. (திருக்குர்ஆண்:41:11)

இவ்வசனத்தில் வானம் புகையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட பின் வானம் புகை மூட்டமாக இருந்து அதன் பிறகுதான் ஒவ்வொரு கோள்களும் உருவாயின என்று இப்போது விஞ்ஞானிகள் கூறுவதை 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆண் கூறி இது இறைவேதம் தான் என்பதை சந்தேகமற நிரூபிக்கிறது. 



திருக்குர்ஆண் ஓர் வாழும் அற்புதம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி.570-ல் பிறந்தார்கள். இந்தக் கால கட்டத்தில் உலக மக்கள் அறிவியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். உலகம் உருண்டை என்ற சாதாராண அறிவு கூட அன்றைய மக்களுக்கு இருக்கவில்லை.
இத்தகைய காலத்தில் வாழ்ந்தவர் எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும், அவரது அறிவைக்கடந்து எதையும் கூறவே இயலாது. சுமார் நூறு வருடம் கடந்த பின் அவரது நூலை வாசித்தால் அதில் பல தவறுகள் இருப்பதை உலகம் கண்டுகொள்ளும்.
நூறு வருடங்களுக்கு பின் என்ன நடக்கும், என்னென்ன கண்டுபிடிக்கப்படும் என்ற விபரங்களை நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவரால் ஊகம் செய்ய இயலாது என்பதே இதற்க்கு காரணம்.
பல அறிஞர்கள் கூட்டாக சேர்ந்து உருவாகிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்கள் கழித்து பார்க்கும் போது அதில் பல தவறுகள் இருப்பதை காண முடியும்.அந்த நூலே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி விடும்.
ஆனால் எழுதவும்,படிக்கவும் தெரியாத,மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் எதை இறை வேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை.
திருக்குர்ஆணை பொறுத்த வரை அது ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. எல்லாத்துறைகளைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது.
பூமி மற்றும் ஏனைய கோள்களின் அமைப்பு, வானில் இருக்கின்ற அதிசயங்கள், புவியில் மற்றும் வானியல் குறித்துப் பேசும் போது, இந்த நூற்றாண்டின் மாமேதையும், வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதை விடச் சிறப்பாக திருக்குர்ஆண் பேசுகிறது.
அது போல் மனிதன் மற்றும் உயிரினங்கள், அவற்றின் உள் அமைப்புகள், உயிரினங்கள் உர்ப்பத்தியாகும் விதம் எனப் பல விஷயங்களை குர்ஆண் பேசுகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் பேசுவது போல் பேசவில்லை. 21 ஆம் நூற்றாண்டின் ஓர் தேர்ந்த மருத்துவ மேதையை விட அழஅகாக பேசுகிறது.
தாவரங்களைப் பற்றி பேசினாலும், மலைகளைப் பற்றி பேசினாலும், நதிகளைப் பற்றி பேசினாலும் 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் பேசியது போல் திருக்கஆனின் பேச்சு இல்லை.
அது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னாள் வரை கண்டுபிடிக்கப்படாத, தற்ப்போது கண்டுபிடிக்கப்பட்ட பல விஷயங்களை திருக்கஆண் அன்றே சொல்லியிருக்கிறது.
பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் பேசுவதை விடச் சிறப்பாக திருக்குர்ஆண் பேசுவதையும், நபிகள் நாயகத்தின் காலச் சூழ்நிலையையும் ஒரு சேர சிந்திப்பவர்கள் "இது முஹம்மது நபியின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது: முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும்" என்ற முடிவுக்குத்தான் வந்தாக வேண்டும்.
இன்றைய அறிவியலின் நவீன கண்டுபிடிப்புகள் மட்டுமின்றி குர்ஆண் கூறுகின்ற அரசியல் சட்டங்கள், குற்றவியல் மற்றும் சிவில் சட்டங்களை ஒருவர் ஆய்வு செய்தால் இன்று உலகமெங்கும் உள்ள எல்லாச் சட்டங்களை விடவும் அது சிறந்து விளங்குவதையும், மனித குலத்துக்கு அதிக பயன் தரக்கூடிய வகையில் அமைந்திருப்பதையும் அறிந்து கொள்வர்.முஸ்லிமல்லாதவர்கள் கூட குர்ஆண் கூறும் சட்டங்களை அமுல்படுத்தக்கொரும் அளவுக்கு குர்ஆண் கூறும் சட்டங்கள் அமைந்துள்ளன.
ஏராளமான சட்டங்களையும், மரபுகளையும், முன் அனுபவங்களையும் ஆய்வு செய்து பல்வேறு சட்ட மேதைகள் உருவாகிய சட்டங்களே ஆண்டு தோறும் திருத்தப்பட்டுக் கொண்டு வரும் நிலையில் இறைச் சட்டங்கள் என முஹம்மது நபி அவர்கள் அறிமுகப்படுத்திய சட்டங்கள் பலராலும் வரவேற்கப்படுவது முஹம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்றாக குர்ஆண் இருக்கவே முடியாது என்பதற்கு மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.
அது போல் உலகம் சந்திக்கின்ற தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு எல்லாராலும் ஏற்கத்தக்க அற்ப்புதமான தீர்வுகளை குர்ஆண் கூறுவதும் இது முஹம்மது நபியின் சொந்த கூற்று இல்லை என்பதற்கான ஆதாரமாக உள்ளது.
குளம்,கோத்திரம்,சாதி,இவற்றால் ஏற்ப்படும் தீண்டாமை உலகில் பல நாடுகளில் பல நூறு ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சனையாக உள்ளது. இந்த சிக்கலான பிரச்சனைக்கும் திருக்குர்ஆண் மிக எளிதான தீர்வை வழங்கி தீண்டாமையை அடியோடு ஒலித்துக் கட்டியதை இதற்க்கு உதாரணமாக குறிப்பிடலாம்.
எதிர் காலத்தில் நடக்கவுள்ள பல செய்திகளை திருக்கஆண் கூறுகிறது.அது கூறியவாறு அவற்றுள் பல நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன. வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறிய இத்தகைய முன்னறிவிப்புகள் ஏராளாம்.
முஹம்மது நபியின் சொந்தக் கூற்றாக திருக்குர்ஆண் இருக்கவே முடியாது என்பதற்கு இவை யாவும் ஆதாரங்களாக உள்ளன.

  










 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes