Thursday, August 11, 2011

ஒரு மனிதனின் நற்பண்புகளும் நற்குணமும் தனது மனைவியிடம் நடந்துகொள்ளும் விதத்தில் தான் தங்கியுள்ளது. அதுவே கணவன்- மனைவி உறவின் அளவுகோளாகும். புனித அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

இறை விசுவாசிகளுக்கு இறை தூதரின் இல்லற வாழ்வில் பல முன்மாதிரிகள் உள்ளன. பெண்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்களை போகப் பொருளாகக் கருதி அனந்தர சொத்தாகக் கொள்வதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
ஒரு மனிதனின் நற்பண்புகளும் நற்குணமும் தனது மனைவியிடம் நடந்துகொள்ளும் விதத்தில் தான் தங்கியுள்ளது. அதுவே கணவன்- மனைவி உறவின் அளவுகோளாகும். புனித அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
விசுவாசம் கொண்டோரே! பெண்களை (இறந்தவருடைய சொத்தாக மதித்து அவர்களை)ப் பலவந்தமாக நீங்கள் அனந்தரம் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. இன்னும் பகிரங்கமாக யாதொருமானக் கேடான காரியத்தை அவர்கள் செய்தாலன்றி, (உங்கள்) பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றைக் (எடுத்துக்) கொண்டு போவதற்காக அவர்களை நீங்கள் தடுத்தும் வைக்காதீர்கள், மேலும் அவர்களுடன் அழகான முறையில் நடந்துகொள்ளுங்கள்.
அவர்களை நீங்கள் வெறுத்துவிடுவீர்களானால் நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும். (அவ்வாறு வெறுக்கக் கூடிய) அதில் அல்லாஹ் அநேக நன்மைகளை ஆக்கக்கூடும். (அல்குர்ஆன், ஸ¤ரதுந்நிஸா:19)
இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘முஃமின்களில் ஈமானில் பூரணமானவர் அவர்களில் அழகிய குணமுடையவரே உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியிடத்தில் சிறந்தவரே’ இல்லற வாழ்வு அமைதிப் பூங்காவாக திகழ வேண்டும் என்பதை இஸ்லாம் விரும்புகின்றது. புனித அல்குர்ஆன் மேலும் கூறுகின்றது.
(நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள்) மனைவிகளை நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்ததும் உங்களுக்கிடையில், அன்பையும் கிருபையையும் ஆக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்தார்க்கு இதில் நிச்சயமாக பல அத்தாட்சிகள் இருக்கின்றன’. (அல்குர்ஆன் 30:21)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘உலக வாழ்வு சிற்றின்பமாகும். இச்சிற்றின்பத்தில் மிகவும் சிறந்தது நற்குணமுள்ள மனைவியாகும்’. (முஸ்லிம்)
மேலும் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘ஒரு முஃமினான ஆண் ஒரு முஃமினான பெண்ணை (வெறுத்து)கோபித்திருக்க வேண்டாம். ஏனெனில், அவன் அவளின் ஒரு பண்பை வெறுத்தால் அவன் விரும்பும் ஒரு பண்பும் அவளில் இருக்கக்கூடும்.’ (முஸ்லிம்)
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்.
“குறைஷிக் குலத்தைச் சேர்ந்த நாங்கள் பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்தோம். நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது அந்நகரப் பெண்கள் ஆண்களின் மீது ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தார்கள்.
எங்களது பெண்கள் அப்பெண்களிடம் பாடம் கற்றுக்கொண்டார்கள். நான் மதீனாவின் மேட்டுப் பகுதியில் உமையா இப்னு ஸைத் கோத்திரத்துடன் வசித்து வந்தேன். ஒரு நாள் என் மனைவி என்மீது கோபப்பட்டு என்னை எதிர்த்துப் பேசியது எனக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. அதற்கவள், ‘நான் உங்களை எதிர்த்துப் பேசியதற்காக நீங்கள் என்னை வெறுக்கின்aர்களா? அல்லாஹ் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களின் துணைவியர் கூட நபியவர்களின் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசத்தான் செய்தார்கள்.
சிலர் நபி (ஸல்) அவர்களுடன் பகலிலிருந்து இரவு வரை பேசுவதில்லை’ என்று கூறினார். பின்பு நான் எனது மகள் உறப்ஸாவிடம் சென்றேன்’ ஹப்ஸாவே! நீ நபியவர்களை எதிர்த்துப் பேசுகின்றாயா! என்று கேட்டேன். ‘ஆம்’ என்றார், ‘உங்களில் சிலர் அல்லாஹ்வின் தூதரிடம் பகலிருந்து இரவு வரை கோபமாக இருக்கிறார்களா?’ என்று கேட்டேன்.
அதற்கு ஹப்ஸா, ஆம், என்றார் நான் கூறினேன். உங்களில் எவரேனும் அவ்வாறு செய்தால் நஷ்டமும் தோல்வியும் அடைந்துவிடுவார். உங்களில் ஒருவர் மீது இறை தூதருக்கு கோபமேற்பட்டால் அதனால் அல்லாஹ்வும் கோபமடைந்து அழிந்து விடுவோம் என்ற அச்சம் அவருக்கில்லையா? நீ இறை தூதரிடம் எதிர்த்துப் பேசாதே; அவர்களிடம் எதையும் கேட்காதே! உனக்குத் தேவையானதை என்னிடமே கேள் என்று கூறினேன். பிறகு உமர் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் வந்து தனக்கும் தனது மகளுக்குமிடையே நடைபெற்ற உரையாடலைக் கூறியபோது நபியவர்கள் புன்னகைத்தார்கள்.

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes