Friday, July 1, 2011

மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த மாநபி

மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த மாநபி ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, 'நீ பார்க்க ஆசைப்படுகின்றாயா?' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி), 'அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்' என்று கூறினார்கள். நான் பார்த்து சலித்த போது, 'உனக்குப் போதுமா?' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். 'அப்படியானால் செல்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புஹாரி, எண்: 950)

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes