Sunday, November 18, 2012

முள்ளங்கிக் கீரை

முள்ளங்கி மண்ணுக்கு அடியில் தோன்றும் கிழங்கு ஆகும். அதன் மேல்பாகத்தில் வளரும் கீரையே முள்ளங்கிக் கீரை என்று அழைக்கப்படுகிறது. இக்கீரைக்கு மருத்துவக் குணங்கள் உண்டு என்றாலும் அடிக்கடி சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இக்கீரை வயிற்றில் புழுக்களை உண்டாக்கும். பித்தத்தையும் அதிகரிக்கும். வாய்வுத் தொல்லையை உண்டாக்கும். இருப்பினும் வெள்ளையால் வரும் நீர் அடைப்பிற்கு முள்ளங்கியைப் போலவே இக்கீரையும் பயன்படுகிறது. இக்கீரையின் தளிர்களைப் பறித்து, சோற்று உப்புடன் சேர்த்து தினமும் காலையும் மாலையும் உண்டு வந்தால் வெள்ளையால் உண்டாகும் நீர் அடைப்பு விலகும். இக்கீரை கல்லீரலில் உண்டாகும் பல கோளாறுகளைக் குணப்படுத்தும், அதுபோல் இருதயத்திற்கும் பலம் சேர்க்கும். இதயப் படபடப்பு, இதய பலவீனம் உடையவர்கள் அவ்வப்போது இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் பலன் கிட்டும். 

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes