Sunday, November 6, 2011

ஒலிநாடா


நிகழ்வுகளை
நினைவுகளாய்ப்
பதிந்து வைக்கும்

இன்றைய செய்திகளை
 
நாளைய வரலாறுகளாய்ப்
பாதுகாத்து வைக்கும்
பேரேடு

துக்கங்கள் யாவும் 
மறந்து போக வைக்கும்
மாமருந்து

வாய்ப்புகளாய்
 
வாசற்கதவினைத் தட்டும்
உருவமில்லா ஓர்
உற்ற நண்பன்

காத்திருத்தல்
 
தவப் பயனாய்
பொறுமை தரும்
வரம்

மேலும் கீழுமாய்ச்
 
சுழற்றிப் போடும்
சக்கரம்

பிறப்பு, இறப்பு
 
மறுமை யாவும்
மறைத்து வைத்துள்ள
இரகசியப்
பெட்டகம்

-  Thnxs
;'கவியன்பன்' கலாம் 

0 comments:

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes