Wednesday, November 28, 2012

அம்மா மனசு

     மஞ்சுவும், சாமிநாதனும் ஒரு கால்குலேட்டரை வைத்துக் கொண்டு வட்டிக்கணக்குப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போய்விட்டனர். ரூபாய் பதிமூன்று லட்சத்து ஐம்பதாயிரத்திற்கு பதினைந்து வருடத் தவணையில் பதினெட்டு சதவீதம் வட்டிக்கு மாதத்திற்கு எவ்வளவு ரூபாய் வருகிறது என்பதைத்தான் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார்கள். மஞ்சுவிற்கு ஒரு தொகை வந்தால், சாமிநாதனுக்கு வேறு ஒரு தொகை வருகிறது. விளைவு? வாய்த்தகராறு தான் மிச்சம். இரண்டு மூன்று நாட்களாக இரவில் படுக்கப் போகும் முன்பு இவர்களுக்கு இதே வேலையாகி விட்டதை உணர்ந்த சாமிநாதனின் அம்மா சிவகாமிக்கு மருமகள் மஞ்சு மீது எரிச்சல் வரவே, "ஏண்டா... சாமிநாதா நீங்க வீடு வாங்கறதுக்குள்ள நாமெல்லாம் ஒரு வழியா ஆயிடுவோம்னு நினைக்கிறேன். தினம் எனக்கு இந்த தலைவலி தாங்க முடியல... இந்த வயதான காலத்தில..."     சிவகாமி இப்படி அலுத்துக்...

Monday, November 19, 2012

சத்து மாவு தயாரிப்பது எப்படி

சத்து மாவு தயாரிக்க பெரிய பயிற்சி எதுவும் தேவையில்லை. செய்வதை ஒரு முறை பார்த்தாலே கற்றுக் கொள்ளலாம். சமையலில் திறமை உள்ளவர்களுக்கு அதுவும் தேவையில்லை. செய்முறையை படித்து பார்த்தே செய்து விடுவார்கள். தயாரிக்கும் முறை தேவையான பொருட்கள்: ராகி 2 கிலோ (ரூ.34), சோளம் 2 கிலோ (ரூ.40), கம்பு 2 கிலோ (ரூ.32), பாசிப்பயறு அரை கிலோ (ரூ.28), கொள்ளு அரை கிலோ (ரூ.10), மக்காசோளம் 2 கிலோ(ரூ.28), பொட்டுக்கடலை ஒரு கிலோ (ரூ.70), சோயா ஒரு கிலோ (ரூ.58), தினை அரை கிலோ (ரூ.18), கருப்பு உளுந்து அரை கிலோ (ரூ.30), சம்பா கோதுமை அரை கிலோ (ரூ.30), பார்லி அரை கிலோ (ரூ.30), நிலக்கடலை அரை கிலோ (ரூ.40), அவல் அரை கிலோ (ரூ.40), ஜவ்வரிசி அரை கிலோ (ரூ.25), வெள்ளை எள் 100 கிராம் (ரூ.12), கசகசா 50 கிராம் (ரூ.30), ஏலம் 50 கிராம் (ரூ.50), முந்திரி 50 கிராம் (ரூ.25), சாரப்பருப்பு 50 கிராம் (ரூ.25), பாதாம் 50 கிராம்...

எந்த மாவில் என்ன சத்து

”தேனாக இருந்தாலும் தேவைக்குத் தக்கபடிதான் பயன்படுத்தணும்” என்பது அனுபவ மொழி. மாவுப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன் இந்த வார்த்தைகளை மனதுக்குள் ஏற்றிக்கொள்வது நலம். ஆம்… ஏராளமான சத்துக்களைக் கொண்ட மாவுப் பொருட்களைப் பயன்படுத்தும்போது அவற்றின் குணங்களுக்குத் தக்கபடி அளவு வைத்துக்கொள்ள வேண்டும். யார் யார் எந்தெந்த வகையான மாவு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும், தவிர்க்க வேண்டும் என்பது குறித்து உணவியல் நிபுணர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டோம். ”அந்தக் காலத்தில் மக்கள் எல்லா இடங்களுக்கும் பெரும்பாலும் நடந்துதான் போனார்கள். செய்யும் வேலைகளிலும் உடல் உழைப்பு அதிகம் இருந்தது. அதற்குத் தகுந்தாற்போல் அவர்களது உணவுப் பழக்கங்களும் இருந்தன. அன்றாட உணவில் 70 சதவிகிதம் வரை மாவுப் பொருட்களை அவர்கள் பயன்படுத்தினார்கள். தற்போதைய சூழ்நிலையில் நாம்...

Sunday, November 18, 2012

ஆரைக் கீரை

நீர் நிறைந்த வயல்கள், நீரோடையின் கரைகள், ஏரிக்கரைகளில் வளரும் இக்கீரைக்கு பூவோ காயோ எதுவும் இல்லை. நான்கு இலைகளுடன் காணப்படும் இக்கீரையை ஆவாரை, சதுப்பன்னி என்றும் அழைக்கிறார்கள். ஆரைக்கீரை இனிப்புச் சுவை உடையது.குளிர்ச்சித் தன்னம உடையது. நாக்கிற்கு நல்ல சுவை தருவது இக்கீரை. உடல் உஷ்ணத்தைத் தணித்து, குளிர்ச்சி குறையாமல் வைத்திருக்கும்.இது அதிகமாய் வெளியேறும் சிறுநீரைக் கட்டுப்படுத்தும். அதனால் உடலில் நீர்ச்சத்து இருக்கும். வறண்ட தேகம் உடையவர்க்கு உகந்கது.இக்கீரையைச் சமைத்து உண்டால் வெள்ளை நோய் குணமாகும். அதிகமான தாகத்தைத் தணிக்கும். சிலருக்கு சிறுநீரில் இரத்தம் கலந்து போகும். அவர்களுக்கு இக்கீரை கண் கண்ட மருந்து. சர்க்கரை வியாதியால் அவதிப்படுபவர்கள் மதியம் மட்டும் இக்கீரையைத் தொடர்ந்து நாற்பது நாட்கள் சமைத்து உண்டுவர, நல்ல குணம் கிட்டும்....

முள்ளங்கிக் கீரை

முள்ளங்கி மண்ணுக்கு அடியில் தோன்றும் கிழங்கு ஆகும். அதன் மேல்பாகத்தில் வளரும் கீரையே முள்ளங்கிக் கீரை என்று அழைக்கப்படுகிறது. இக்கீரைக்கு மருத்துவக் குணங்கள் உண்டு என்றாலும் அடிக்கடி சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இக்கீரை வயிற்றில் புழுக்களை உண்டாக்கும். பித்தத்தையும் அதிகரிக்கும். வாய்வுத் தொல்லையை உண்டாக்கும். இருப்பினும் வெள்ளையால் வரும் நீர் அடைப்பிற்கு முள்ளங்கியைப் போலவே இக்கீரையும் பயன்படுகிறது. இக்கீரையின் தளிர்களைப் பறித்து, சோற்று உப்புடன் சேர்த்து தினமும் காலையும் மாலையும் உண்டு வந்தால் வெள்ளையால் உண்டாகும் நீர் அடைப்பு விலகும். இக்கீரை கல்லீரலில் உண்டாகும் பல கோளாறுகளைக் குணப்படுத்தும், அதுபோல் இருதயத்திற்கும் பலம் சேர்க்கும். இதயப் படபடப்பு, இதய பலவீனம் உடையவர்கள் அவ்வப்போது இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் பலன் கிட்ட...

பொடுதலை

கிராமங்களில் அதிகம் காணப்படும் பொடுதலை பற்றி தெரிந்து கொள்வோம்.இது தரையோடு படர்ந்திருக்கும். ஆறு, குளம், குட்டை, வாய்க்கால் வரப்புகளில் இந்த கீரைகள் அதிகம் காணப்படும். பெரும்பாலானோர் இதனை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது தென்னிந்தியா முழுவதும் அதிகம் காணப்படுகிறது.பொடுதலையின் பேருரைத்தால் போராமப் போக்கும்அடுதலை செய் காசம் அடங்கும்கடுகிவருபேதியொடு சூலைநோய் பேசரிய வெண்மேகம்வாதமும் போ மெய்யுரக்கும் வாழ்த்து(அகத்தியர் குணபாடம்)இது வெப்பத் தன்மை கொண்டது.இதனை பூற்சாதம், பொடுதலை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.இதன் இலை, வேர் மருத்துவப் பயன் கொண்டது.ஒற்றைத் தலைவலி நீங்கதலைவலியால் பாதிக்கப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் தலைவலிதான் முதலில் உருவாகும். இதில் மன அழுத்தம் உருவானால் ஒற்றைத்...

கீரையை விட சத்தான உணவுவகை உண்டோ

தேவையான வைட்டமின் சத்துக்களையும், தாதுப்புக்களையும் பெற ஒருவர் தினசா¢ 125 கிராம் கீரைகளையும் 75 கிராம் காய்களையும் அன்¢சி, பருப்பு போன்ற உணவுகளில் நமக்குத் தேவையான மாவுப் பொருட்களும், புரதமும் மட்டுமே கிடைக்கின்றன. முக்கியமான வைட்டமின் சத்துக்களையும் தாதுப்புக்களையும் நாம் கீரையிலிருந்துதான் எளிதாகப் பெற முடியும்.* கீரைகள் விலை மலிவாகயிருப்பதனால் அவைகளில் சத்து இல்லை என்றோ, அதிக விலை கொடுத்து வாங்கும் பழங்களில்தான் சத்து என்றோ நினைத்துவிடக் கூடாது. உதாரணமாக,  ஒரு கிலோ அரைக் கீரையிலுள்ள இரும்புச்சத்தைப் பெறுவதற்கு 12 கிலோ அன்னாசிப் பழம் சாப்பிட வேண்டும். * இதுபோல் ஒப்புநோக்க முடியாத அளவுக்கு பழங்களைவிட அதிகச் சத்துக்கள் கொண்டவை கீரைகள். இதிலிருந்தே கீரைகளை நாம் உணவில் தினசா¢ சேர்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியம் விளங்கும்.* வைட்டமின் ஏ நமது கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குத் தேவைப்படுகிறது....

யானை திப்பிலி:

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்பொழுதும், இனிப்பு சார்ந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும்போதும், வேறு சில புழுக்கள் மற்றும் கிருமிகள் சுகாதாரமற்ற நீர் மற்றும் கெட்டுப்போன உணவுகள் மூலமாக உடலில் நுழையும்பொழுதும், தங்களை காத்துக்கொள்வதற்காக குடல் புழுக்களும் பெருகுகின்றன.இதனால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. * தோலில் தடிப்பு, அரிப்பு, மலவாயில் எரிச்சல் மற்றும் வெடிப்பு, மலச்சிக்கல் அல்லது கழிச்சல், தலையில் பொடுகு, வாயில் புண்கள் மூக்குத்துளை ஓரங்களில் அரிப்பு, முகம் மற்றும் கன்னப்பகுதிகளில் ஒரு வித வெளுப்பு, * வாயில் துர்நாற்றம், மலம் கழிக்கும்பொழுதும், அபானவாயு பிரியும்பொழுதும் துர்நாற்றம், புழுக்கள் இனப்பெருக்க பாதையில் தொற்றை ஏற்படுத்தி வெள்ளைப்படுதல், மாதவிலக்கு திரவம் மற்றும் வெள்ளையில் சிறுசிறு புழுக்கள் வெளியேறுதல், *...

லெட்டூஸ் கீரை

கீரை வகைகளில் சிறந்த உணவாக லெட்டூஸ் கருதப்படுகிறது. இது இலை கீரையாகும். இதனை பச்சடிக்கீரை, சாலட்டுக்கீரை என்றும் கூறுவர். இதன் பிறப்பிடம் இந்தியா தான்.  இந்தியர்களை விட இக்கீரையை ஐரோப்பியர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர்.* இந்தக் கீரையானது இமயமலைச்சாரலில் ஏராளமாக தன்னிச்சையாக வளரக் கூடியது. பூப்பதற்கு முன்னுள்ள இலைகளே உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது. இலைகள் நீண்ட முட்டை வடிவமுள்ளதாய் இருக்கும்.* சில வகைகள் சுருள் சுருளான இலை அமைப்பை பெற்றிருக்கும் இலைகள் தடிப்பாக இருக்கும். சாறு நிறைந்து மிக மென்மையாக இருக்கும். பச்சை நிறம் கீரை வகையைச் சார்ந்தது.* சாலட்டுகளில் அழகுக்காக சேர்க்கப்படுவது எனினும் வைட்டடமின்'ஈ' சத்தும், அதிகப்படியான தாது உப்புகளும் நிறைந்து காணப்படுகின்றன. புற ஊதாக்கதிர் மற்றும் சூரியக்கதிர் தாக்கத்திற்குட்படும்...

Page 1 of 7212345Next

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes