கொசுக்களை விரட்ட விளக்கெண்ணெய்!
பாகல் இலை சாறுடன் மோர் கலந்து குடித்து வந்தால் மூல நோய் குணமடையும்.
கத்தரி பிஞ்சுடன் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வராது.நாரத்தை சாறுடன் உப்பு சேர்த்து சாப்பிட்டால் உமிழ் நீர் அதிகம் ஊறுவது குறையும்.
கத்தரி பிஞ்சுடன் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வராது.நாரத்தை சாறுடன் உப்பு சேர்த்து சாப்பிட்டால் உமிழ் நீர் அதிகம் ஊறுவது குறையும்.
- ஆர். பிரபா, திருநெல்வேலி.
வெண்டைக்காய் பொரியல் உதிர் உதிராக இருக்க வேண்டுமா? வெண்டைக்காய் வதக்கலை இறக்கும்போது சிறிது பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்துச் சேர்த்து விடுங்கள்.
துருவிய கொப்பரை தேங்காய், உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை இவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வறுத்து, ஆறியதும் கொரகொரப்பாக பொடிக்கவும். இதை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம், கிழங்கு பொரியல்களுக்கு மேலாகத் தூவலாம்.
- ராதா மோகன், சென்னை-4.
தக்காளி நன்றாக கனிந்து இருந்தால் அவற்றின் மீது சிறிது தூள் உப்பைத் துவி பிசறி வைக்கவும். இரண்டு நாட்கள் ஆனாலும் கெடாது, அப்போதுதான் பறித்த தக்காளி போல கெட்டிப்பட்டு இருக்கும்.
- எஸ். நித்யா, சென்னை-56.
0 comments:
Post a Comment