Wednesday, September 11, 2013

மந்தாரையின் மருத்துவ பயன்பாடு

சென்னை போன்ற பெரு நகரங்களில் மந்தாரை இலைகளைச் சேர்த்து ஈக்குகளால் தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு  சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச்  சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன. 
In big cities like Chennai ORCHID ikkukal leaves along the stitch used to eat rice.

இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை  காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது.  மேலும் ரத்தமூலம், சிறுநீர்த்தாரையில் புண் போன்றவற்றையும் நன்கு குணப்படுத்தும். சில வகை மந்தார மரங்களில் சிவப்பு, நிறப்பூக்கள் மலரும்  இந்த மலர்களை சேகரித்து தூளாக்கி சர்க்கரை சேர்த்து ஒரு சிட்டிகையளவு தேன் கலந்து உண்டால் மலச்சிக்கள் அகன்று தாராளமாக மலங்கழியும். 

மந்தாரை மரத்தின் பட்டையை 20 கிராம் அளவுக்கு சேகரித்து நன்கு இடித்து நீர் விட்டு அரை டம்ளராகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரணத்தால்  வரும் பேதி நின்று உடல் நலம் பெறும். முக்கியமாக மந்தாரை கக்குவான் இருமல், ஆஸ்துமா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, சுவாச நோய்கள்,  ஆகியவற்றிக்கு வீட்டிலே இயற்கை மருந்து தயாரித்து பயன்படுத்தலாம். 

மந்தாரை இலைகள் வாதநோய், கால்வலி, தசைபிடிப்பு தொடர்புடைய வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. இதயநோய், படபடப்பு,  ஆகியவற்றை  குணப்படுத்துவதற்கும் இது பயன்படுகிறது. மேலும் வயிற்றுபோக்கு படுக்கையில் சிறுநீர்கழித்தல், அதிக பித்த நீரால் ஏற்படும் மலேரியா காய்ச்சல்,  பொடுகு, முடி உதிர்வதை குறைத்தல், மூலநோய் போன்ற அனைத்திற்கும் ஊமத்தையின் இலை பெரிதும் பயன்படுகிறது.   

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் வெந்தயக்கீரை

சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை . இது சத்து நிறைந்த கீரை. வெந்தயம் விதைகளின் மூலம் பயிரடப்படுகிறது. இது மூன்று மாதங்களில் பூத்துக் காய்த்துப் பலன் தந்துவிடும். கீரையாகப் பயன்படுத்துவதற்குப் பூக்கும் முன்னரேயே வெந்தயச் செடியைப் பிடுங்கிவிட வேண்டும். வெந்தயச் செடி இளம் பச்சை நிறமுடையது. 

சுமார் இரண்டரை அடி வரை வளரும். வீட்டுத் தோட்டத்திலும் தொட்டியிலும் இதை மிக எளிதாக வளர்க்க முடியும். வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். இதை துவரம்பருப்புடன் வேக வைத்து கூட்டாகச் செய்து சாப்பிடலாம். இந்தக் கீரையுடன் புளி சேர்த்து வேக வைத்தும் கூட்டு தயாரிக்கலாம். 
Normally used in cooking talaitan fenugreek spinch of fenugreek seeds. This nutrient-rich spinach. Fenugreek seeds growth through. This is the result of three months kayttu tantuvitum Booth. Fenugreek spinach before flowering plant used to pitunkivita. Fenugreek young green plant.

வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். 

குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது. வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக்கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும். 

நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரை ஒரு சிறந்த பத்திய உணவாகும். இதை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை ஆறும். இந்தக் கீரையை வதக்கி அதனுடன் வாதுமைப் பருப்பு, கசகச கோதுமை ஆகியவற்றைச் சேர்த்துப் பால்விட்டு அரைத்து நெய்விட்டுக் கிண்டி உட்கொண்டால் உடலுக்கு வலிமையும், வனப்பும் ஏற்படும். 

இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரையுடன் சீமைப்புள், அத்திப்பழம், திராட்சை ஆகியவை சேர்த்துக் கஷாயமிட்டு தேன் கலந்து உண்டால் மார்பு வலி, மூக்கடைப்பு ஆகிய நோய்கள் நீங்கும். மூலநோய், குடல் புண் போன்ற நோய்களுக்கும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகத் திகழ்கிறது. வெந்தயக் கீரையை அரைத்துச் சூடு செய்து வீக்கங்கள் மீது பூசினால் வீக்கம் குறையும். இவ்வாறு செய்வதால் தீப்புண்களும் குணமாகும். இந்தக் கீரையை சீமை அத்திப்பழத்துடன் சேர்த்துக் கரைத்துக் கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் அவை விரைவில் பழுத்து உடையும். 

வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் உள்ளது. இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. வெந்தயக் கீரை சீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது. 

சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. மூளை நரம்புகளைப் பலப்படுத்துகிறது. வயிற்றுக் கட்டி, உடல் வீக்கம், சீதபேதி, குத்திருமல், வயிற்று வலி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது. வெள்ளைப் பூசணிக்காய் சாம்பாரில் வெந்தயக் கீரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் பெருத்த உடல் இளைக்கும்.

அல்சரை போக்கும் கீரை

கீரை இயற்கையின் பரிசு. தினமும் உணவில் கீரை சேர்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கீரையில் வைட்டமின் ஏ,  கே, டி மற்றும் தாதுபொருட்கள் அடங்கியுள்ளன. கீரையில் அடங்கியுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நல்ல மூல ஆதாரமாக விளங்குகின்றது.. 

கீரை புற்றுநோய்கெதிரான மற்றும் அழற்சியை தடுக்கின்ற நோய்யெதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது. குழந்தைகளுக்கு கீரைகளை கொடுத்து வளர்க்க  வேண்டும். கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு ஆரோக்கியமான பலன்களை தருகிறது. கீரை, காய்கறிகள், மற்றும் பழங்கள்  சேர்த்து கலந்து ஜீஸ் செய்து சாப்பிடலாம்.  

கீரையை ப்ரீசரில் வைத்தாலும் அதன் பலன் குறையாது. என்றாலும் கீரைகளை வாங்கிய நாட்களிலே சமையல் செய் சாப்பிட வேண்டும். கீரை  சாப்பிடுவதால் கண்களுக்கான பிரச்சனை எதுவும் ஏற்படாது மேலும் உடல் எலும்புகளை வலுவடையச் செய்கிறது. கீரை சாப்பிட்டால் செரிமானம்  சம்பந்தமான பிரச்சனைகளை தவிர்க்கிறது. Spinach is a gift of nature. Spinach is advising doctors to be included in the daily diet.


அல்சரால் அவதி படுகின்றவர்கள் கீரையை தினம் ஒரு வேளை உணவில் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் வயிறு சம்பந்தமான அனைத்து  பிரச்சனைகளுக்கும் இது சிறந்த தேர்வாக உள்ளது. பெருங்குடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுகிறது. தோல் பராமரிப்பிற்கும் கீரை  உதவிகிறது. 

கீரையில் வைட்டமின்கள் மற்றும் தாதுபொருட்கள் அடங்கியுள்ளதால் உலர்ந்த, அரிப்பு ஏற்படுத்த கூடிய தோல்களை உடையவர்களுக்கு இது உடனடி  நிவாரணியாக செயல்படுகிறது. இதய நோய்களை தடுக்கிறது. அதாவது கீரையில் அடங்கியுள்ள வைட்டமின் ஏ மற்றும் சி ஆக்ஸிஜனேற்றத்தை  தடுத்து கொழுப்பின் அளவை குறைத்து இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்துக்கு ஹோமோசைஸ்டீன் ரசாயன மருந்தாக உள்ளது. கீரையில் அடங்கியுள்ள  கரோட்டின்  புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்க உதவுகிறது. கர்ப்பபை புற்றுநோயால் பாதிக்கபடுபவர்களுக்கு கீரை சிறந்த ரசாயன மருந்தாக  உதவுகிறது.

வல்லாரையும் அதன் பயன்களும்

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது. கஷாயம், காசம், மேகம், போன்ற நோய்களைக் குணப்படுத்துவதில் வல்லாரை கீரை நிகரற்றது. இந்த கீரையை  பால் கலந்து அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட விழுதை நெல்லிக்காய் அளவு திரட்டி உண்ண வேண்டும். இப்படி இந்த விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து அளமை தோற்றம் திரும்பும். 
 Vallarai becoming capable of so much spinach. Brew, cough, cloud, vallarai in treating diseases such as spinach unrivaled.

எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் வல்லாரை இலையால் செய்யப்பட்ட மாத்திரை குணமாக்கும். உடலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் புண்கள் ஆகியவற்றை வல்லாரை சரிசெய்து விடும் ஆற்றல் வாய்ந்தது. வல்லாரை இலையுடன் மிளகு, துளசி இலை, ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகுபதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு சுடுநீரில் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும். 

யானைக்கால் நோய் உள்ளவர்கள் இந்த இலையை தொடர்ந்து காலில் வைத்து கட்டி வந்தால் யானைக்கால் நோய் எளிதில் குணமாகும். வல்லாரை இலையை அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் விரை வீக்கம், வாயுவீக்கம், தசை சிதைவு, போன்றவை குணமாகிவிடும். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து 'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. 

மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரசுவதிக் கீரை யென்றும் அழைக்கின்றனர். இரத்த சுத்திகரிப்பு வேலையைச் சிறப்பாக செய்கிறது. தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது. இக்கீரையை கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும். 

சிவப்பு கீரையும் பயன்பாடும்

கீரையில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரு கீரையும் உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. மேலும் பச்சை நிறம் கொண்ட  கீரைகளை விட கவர்ச்சிகரமான தோற்றம் கொண்ட சிவப்பு கீரையில் தாவர ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக சிவப்பு கீரையில்  அதிக இரும்பு சத்து காணப்படுவதால் ஊட்டச்சத்துகளை இரத்தத்தில் சேர்க்கிறது. 

கூடுதலாக சிவப்பு கீரையில் வைட்டமின் ஏ,பி,சி மற்றும் சி பொட்டாசியம், பாஸ்பரஸ் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு 100 கிராம் கீரையிலும் 45  கிலோ கலோரி, புரதம் 3.5 கிராம், 0.5 கிராம் கொழுப்பு, 6.5 கிராம் கார்போஹைட்ரேட், 267மிகி கால்சியம், பாஸ்பரஸ் 67மில்லி கிராம், இரும்பு 3.9  மில்லி கிராம், விழித்திரை 1827 மெக்ஜி, 0:08 தயாமின் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் 60 மில்லி கிராம் கொண்டு செயல்படுகிறது. 

முக்கியமாக கீரையில் பீட்டா கரோட்டின், லுடீன், குளோரோபில், ஃபோலிக் அமிலம் மற்றும் மாங்கனீசு கொண்டிருக்கிறது. எந்த வகையான கீரையாக  இருந்தாலும் அவை ரத்தசோகை, வறிற்று கடுப்பு, கபம், நோய் எதிர்ப்புசக்தி, கல்லீரல், ஆம்பியண்ட் காய்ச்சல் போன்றவற்றிக்கு தீர்வு வழங்குகிறது.  கீரை புற்றுநோயை தடுப்பதோடு மட்டுமல்லாமல் கீரையில் நார்சத்துகள் கொண்டுள்ளதால் மலச்சிக்கல், செரிமான கோளாறுகளையும் நீக்குகிறது. 
 Many varieties of spinach, green like spinach, spiny amaranth, spinach and spinach red forest.

அதிக வெப்பத்தில் கீரையை சமைக்கும் போது கீரை சேதமடையாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். கீரை வேகவைக்கும் போது  சேதமடைந்தால் கீரையில் உள்ள பெஸ்பன் பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு போதை மருந்தாக செயல்படும். நார்சத்து உணவான  கீரை பெருங்குடல், புற்றுநோய், நீரிழிவு, அதிக கொழுப்பு, எடைகுறைத்தல் போன்றவைக்கு சிவப்பு கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. 

சிறுநீரகத்தை மேம்படுத்தி மகப்பேறு காலத்தில் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. சிறுநீரகத்தை சுத்தபடுத்த வேண்டும் என்றால் ரத்தத்தை சுத்தபடுத்திய  பின்னர் காய்கறி போல கீரையை சாப்பிடலாம். ரத்தசோகை உள்ளவர்கள் 2கைப்பிடி சிவப்பு கீரைகளை எடுத்து சீராகும் வரை பிசைந்து அதில்  1டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஸ்டெயனைடு சேர்க்கவும். பின்னர் தேன் மற்றும் முட்டை 1 தேக்கரண்டி சேர்க்கவும். இந்த பானத்தை வாரத்தில் ஒரு  முறை குடிக்கலாம். வயிற்றுகடுப்பு இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் எளிதில் குணமாகும். பின்னர் கீரையை சுத்தம் செய்து உப்பு சேர்த்த வேக  கைவைத்து ஜீஸ் செய்து சாப்பிடலாம். 

நோய் வராமல் தடுக்க தினமும் 100 கிராம் கீரையை ஒரு வேளையாவது உணவில் சேர்த்து உடல் நலத்தை பாதுகாத்து கொள்வோம்.. ஏதேனும்  நோய் இருந்தாலும் கூட கீரையை உணவில் எடுத்துக்கொள்வதால் நோயிலிருந்து விடுதலை பெறலாம். 

வயிற்று புண்ணை குணப்படுத்தும் முளைக்கீரை

கீரையை தினமும் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். முளைக்கீரை அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்த கீரை. இக்கீரையில்  வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் கே, வைட்டமின் சி, போலேட் மற்றும் ரிபோப்லாவின் ஆகியவற்றை கொண்டுள்ளது.. நீர்சத்து  அதிகமுள்ள முளைக்கீரை வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் தன்மை கொண்டது. 

உடலுக்கு பலம் கூட்டும் சக்தியை கொண்டது. சிறுவர்களுக்கு இந்தக்கீரையை தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி அடைவார்கள்.  முளைக்கீரையில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம், பாஸ்பரஸ், மங்கனீசு போன்ற கணிமங்களை கொண்டுள்ளது முளைக்கீரை.  கோதுமை, அரிசி, ஓட்ஸ், ஆகியவற்றில் கொண்டுள்ள புரதத்தை விட 30% அதிகபுரதத்தை கொண்டுள்ளது. இதயநோய், உயர் ரத்தஅழுத்தம்  உள்ளவர்களுக்கு முளைக்கீரை உதவுகிறது. 
Spinach need to take daily diet. Spinach is rich in nutrients and vitamins AMARANTH
முளைக்கீரை மிளகூட்டல்

என்னென்ன தேவை

முளைக்கீரை-1கட்டு
துவரம் பருப்பு-100 கிராம்
துருவிய தேங்காய்-1மூடி
சீரகம்-1ஸ்பூன்
காய்ந்த மிளகாய்-3
உளுந்தம் பருப்பு-1ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்-1ஸ்பூன்
கடுகு- 1/2ஸ்பூன்
பெருங்காயம்- ஒரு சிட்டிகை
உப்பு-தேவையான அளவு

எப்படி செய்வது
முதலில் துவரம் பருப்பை மஞ்சள்தூள் போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கீரையின் மண் நிரம்பிய வேர் பகுதியை நறுக்கிப் போட்டு  விட்டு மீதமிருக்கும் கீரையை தண்ணீரில் சுத்தமாக அலசி பொடிபொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். நறுக்கிய கீரையை தனியாக வேகவைத்து  எடுத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விடாமல் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயுடன் சீரகம், மற்றும் தேங்காய்  சேர்த்து மை போல மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விடவும். தீயை மிதமாக  வைத்துக்கொள்ளவும். பின்னர் கீரையையும் துவரம் பருப்பையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு கிளறவும். அரைத்த விழுதையும் சேர்க்கவும். கொஞ்சம்  தண்ணீர் சேர்த்து அனைத்தையும் ஒன்றாகச் சேரும்படி கிளறவும். எல்லாம் சேர்ந்து வந்ததும் இறக்கி வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்  எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும். சுவையான முளைக்கீரை மிளகூட்டல் தயார்.

அல்லி மலர்

நீரிழிவை கட்டுப்படுத்தும் 

 Allicceti blooming flowers than leaves in water that is more than maruttuvattanmai. Flowers on the white Nymphaeaceae, red   Nymphaeaceae appear to benefit both.
ல் பூக்கும் அல்லிச்செடியின் இலைகளை விட இதன் மலர்களுக்குத்தான் மருத்துவத்தன்மை அதிகம் உண்டு. மலர்களில் வெள்ளை அல்லி, சிவப்பு  அல்லி ஆகிய இரண்டுமே பயன் தரக்கூடியவையாகும். அல்லி பூவைச் சாறெடுத்து சிறிதளவு செந்தூரம் கலந்து அரை மண்டலமாக (இருபது நாள்)  தொடர்ந்து சாப்பிட்டு வர உஷ்ணம் தொடர்பான பிணிகள் சரிப்படும். வெள்ளை அல்லிப்பூவையும், ஆவாரம் பூவையும் சமஅளவு எடுத்து போதிய  அளவு சர்க்கரை சேர்த்து நீரிலிட்டுக் காய்ச்ச வேண்டும். 


பாகு பதமான உடன் இறக்கி ஆறவைத்து, காலையிலும் மாலையிலும் பசுவின் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர சிறுநீர் தாரை தொடர்பான  நோய்களைக் குணமாக்கும். நீரிழிவு நோய்கள் உள்ளவர்கள் தொடர்ந்து நாற்பது நாட்கள் இதனைச் சாப்பிட்டு வர குணம் பெறும். கண்சிவப்பு, கண்  எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் இவற்றுக்கு அல்லி இதழ்களை அரிந்து கண்களின் மீது வைத்து கட்டிவர நல்ல குணம் கிடைக்கும். அல்லி இலையை  நிழலில் உலர்த்தி பொடி செய்து பால் அல்லது தேனில் கலந்து உட்கொண்டு வர அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவைத் தடுக்கலாம். 

கோடைக் காலத்தில் உஷ்ணத்தினால் குழந்தைகளுக்கு கட்டிகள் ஏற்படும். இக்கட்டிகளை போக்க அல்லி இலையும் அவுரி இலையும் சம அளவில்  எடுத்து அரிசி கழுவிய நீரில் அரைத்து பூசினால் கட்டி உடைந்து குணமடையும். அவுரி இலைக்குப் பதில் ஆவாரைக் கொழுந்தை சேர்த்து அரைத்துப்  பூச அக்கி கொப்புளம் தீரும். சிவப்பு அல்லி இதழ்களுடன் செம்பருத்திப் பூ இதழ் சேர்த்து காய்ச்சி கசாயம் செய்து குடித்து வர இதயம் பலமடையும்.  இதய படபடப்பு நீங்கும். 

உடலில் ரத்தம் பெருகும். அல்லி விதையுடன் சம அளவு ஆவாரம் விதை சேர்த்து பொடியாக்கி 1-2 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர  வெள்ளை நோய் குணமாகும். ஆண்மை பெருகும். அல்லி விதையை சேகரித்து தூளாக்கி பாலுடன் கலந்து குடித்து வர தாது விருத்தி உண்டாகும்.  கல்லீரலும் மண்ணீரலும் பலமடையும். 

மாதுளை பூ

உடலை வலுவாக்கும் 


மாற We know that the medicinal properties of all types of flowers ..


எல்லா வகையான பூக்களுக்கும் மருத்துவ குணங்கள் இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம்.. பொதுவாக மாதுளை என்றதும் பலருக்கு ஞாபகத்துக்கு  வருவது மாதுளை பழம் தான். நாம் உண்னும் மாதுளை பழத்தில் வைட்டமின்கள், தாதுபொருட்கள் இருப்பது போல மாதுளை பூவும் சத்துகளை  கொண்டுள்ளது. இரத்த மூலத்திற்கும், இரத்த பேதிக்கும் மாதுளம் பூ மிகச் சிறந்த மருந்து பொருள்.

உலர்ந்த மாதுளைப்பூவை முப்பது கிராம் எடுத்து சேகரித்து பதினைந்து கிராம் வேலம் பிசின், மூடுன்று அரிசி எடை அபின் ஆகிய மூன்றையும்  சேர்த்து சூரணமாக்கி ஒரு வேளைக்கு ஆறு குன்றிமணி எடை வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம், இரத்த பேதி முதலியன குணமாகும். உலர்ந்த  மாதுளை மொக்கை இடித்து தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். கடுமையான இருமல் தோன்றினால் ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டு கொஞ்சம்  தண்ணீர் அருந்தினால் உடனே குணம் தெரியும்.

உலர்ந்த மாதுளைப்பூக்களை ஒரு தேக்கரண்டி எடுத்து தயிரில் கலந்து சாப்பிட்டால்  சீதபேதி சீக்கிரமாக சரியாகிவிடும். ரத்த பேதிக்கும் இதே  முறையில் கொடுக்க குணம் தெரியும். சீரகத்தோடு உலர்ந்த மாதுளைப்பூவைச் சேர்த்து மண் சட்டியில்  போட்டு  பொன் வறுவலாக வறுத்து கொள்ள  வேண்டும். இதனை இடித்து நன்கு தூளாக்கி வஸ்திர காயம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.இந்த சூரணத்தில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து  சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால்  மூலவாயு மாறும் உஷ்ணத்தில் தோன்றக்கூடிய பேதியும் குணமாகும்.

ஆரோக்கியமான உடல் நலம் பெற விரும்புபவர்கள் மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல்  வலுவடைந்து ஆரோக்கிய உடல் கிடைக்கும். சிலருக்கு வயிற்றில் வாயுக்களின் சீற்றத்தால் சிறிது சாப்பிட்டாலும் வயிறு நிறைந்தது போல்  காணப்படும். பசி என்பதே இவர்களுக்கு தோன்றாது.  இவர்கள் மாதுளம் பூவை கஷாயம் செய்து பனைவெல்லம் சேர்த்து அருந்தினால் வாயுக்கள்  சீற்றம் குறையும்.

கருப்பை நன்கு வலுவடைய மாதுளம் பூவை கஷாயம் செய்து காலை வேளையில் அருந்திவந்தால் கருப்பை வலுவடையும். மாதவிலக்கு நிற்கும்  காலமான மொனோபாஸ் காலத்தில்பெண்களுக்கு அதிகமான மன உளைச்சல் உண்டாகும். கை, கால், இடுப்பு மூட்டுகளில் வலி உண்டாகும். இவர்கள்  மாதுளம் பூவை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் இப்பிரச்சனை நீங்கும்.  அதுபோல வெள்ளை படுதலும் குணமாகும்.  

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes